மேட்டுப்பாளையம், ஜூலை 17- சிறுமுகையில் மக்களுடன் முதல்வர் முகாமில் பொது மக்களிடமிருந்து 1500 க்கு மேற்பட்ட மனுக்கள் பெறப்பட் டன.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் தாலுகா அள வில் பெள்ளேபாளையம், பெள்ளாதி, சிக்காரம்பாளையம், ஜடையம்பாளையம் உள்ளிட்ட ஊராட்சிகளைச்சேர்ந்த பொதுமக்களுக்கு திங்களன்று மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு, பெள்ளேபாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் பிரஸ்குமார் தலைமை வகித்தார். மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் நிறைமதி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக கோவை மாவட்ட கூடுதல் ஆட்சி யர்(வளர்ச்சி) ஸ்வேதா சுமன் கலந்து கொண்டு பொதுமக்களி டமிருந்து மனுக்களை பெற்று முகாமை துவக்கி வைத் தார்.
இம்முகாமில், குடிநீர் பிரச்சினை, புதிய ரேஷன் கார்டு விண்ணப்பித்தல், முகவரி மாற்றம், பெயர் மாற்றம், பட்டா மாறுதல், நில அளவீடு, இலவச பட்டா, கலைஞரின் கனவு இல்லம், முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு அட்டை, மகளிர் உரிமைத்தொகை, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மனுக்களாக இந்த ஊராட்சிகளைச்சேர்ந்த பொதுமக்கள் அதற்குரிய அதிகாரிகளிடம் வழங்கினர்.
வீட்டு வசதி, வருவாய், மின்வாரியம், ஊரக வளர்ச்சி மற் றும் ஊராட்சி துறை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை என 15க்கும் மேற்பட்ட பல்வேறு அரசுத் துறைகளைச்சேர்ந்த மாவட்ட மற்றும் வட்ட அளவிலான அதி காரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டு பொதுமக்களி டமிருந்து மனுக்களை பெற்றனர். திங்களன்று ஒரே நாளில் சிறுமுகையில் நடைபெற்ற மக்களிடம் முதல்வர் முகாமில் 1500க்கும் மேற்பட்ட மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன. அம்மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டு உரிய தீர்வு அளிக்கப்படும் என வருவாய்த்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
இம்முகாமில், வடக்கு வருவாய் கோட்டாட்சியர் கோவிந் தன், வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரா, ஜடையம்பாளை யம் ஊராட்சி மன்றத் தலைவர் ஆர்.கே.பழனிச்சாமி, முன் னாள் எம்எல்ஏ பா.அருண்குமார், மாவட்ட அறங்காவ லர் குழு உறுப்பினர் கவிதா கல்யாண சுந்தரம், சிறுமுகை பேரூராட்சித் தலைவர் மாலதி உதயகுமார், துணைத்தலை வர் செந்தில்குமார், திமுக காரமடை கிழக்கு ஒன்றியச் செயலா ளர் எஸ்.எம்.டி.கல்யாணசுந்தரம், சிறுமுகை பேரூர் கழகச் செயலாளர் உதயகுமார், ஊராட்சி துணைத்தலைவர் சுரேந்தி ரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.