சேலம், நவ.9- அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 5 லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்ட அதி முக பிரமுகரிடமிருந்து பணத்தை மீட்டு தரக் கோரி பாதிக்கப்பட்ட பெண் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்த சம்ப வம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம், தாரமங்கலம் பகுதியை சேர்ந்த செல்வி என்பவர் தனியார் பள்ளி ஆசிரிய ராக பணியாற்றி வருகிறார். இவருக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இந்நிலை யில் மூத்த மகளுக்கு சேலம் மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் தாலிக்கு தங்கம் வழங் கும் திட்ட அலுவலர் பணியை முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் வெற்றிவேல் மூலமாக வாங்கித் தருவதாக கூறி, அதிமுகவை சேர்ந்த தாரமங்கலம் வடக்கு ஒன்றிய செய லாளர் மணிமுத்து என்பவர் ரூ.5 லட்சம் பணம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. பணத்தைப் பெற்று மூன்று ஆண்டுகள் ஆன நிலையில் வேலை வாங்கி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதனால் பலமுறை கேட்டும் பணம் தர மறுத்துள்ளதாக கூறப் படுகிறது. இதனிடையே மகளின் திருமணத்திற்கு செல்வி ஏற்பாடு செய்த நிலையில் பணம் இல்லாததால் அவரிடம் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுள்ளார். ஆனால் பணத்தை கொடுக்காமல் கொலை மிரட்டல் விடுத்த தாக பாதிக்கப்பட்ட பெண் குற்றம்சாட்டினர். எனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை நடவடிக்கை எடுத்து தனது பணத்தை மீட்டு தரவேண்டும் என்று பாதிக்கப்பட்ட பெண் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் புகார் மனு அளித்துள்ளார். மேலும், 5 லட்சம் பணம் கேட்டு அதிமுக பிரமுகரிடம் பேசும் ஆடியோ மற்றும் பணம் கொடுக்கும் வீடியோ காட்சிகளை புகார் மனுவுடன் வழங்கினார். அதிமுக பிரமுகர் அரசு வேலை வாங்கித் தருவதாக அதிமுக பிரமுகர் ரூ 5 லட்சம் பெற்று மோசடியில் ஈடுபட்ட சம்பவம் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.