districts

img

உலகைச்சுற்றிய மோடி – ஆதாயம் அடைந்த அம்பானி, அதானி

கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வை குண்டம் போக ஆசைப் பட்டானாம் என்கிற சொலவாடை ஒன்று உண்டு. உள்ளூர் தொழில்களை எல்லாம் நெருக்கடியில் தள்ளிவிட்டு, முதலீட்டை ஈர்க்க உலகை சுற்றிய  மோடியின் உண்மைக்கதை அம்பலமாகியுள்ளது.  இந்தியாவின் நவரத்தினங்கள் என அழைக் கப்படுகிற பொதுத்துறை நிறுவனங்கள் அனைத் தின் பங்குகுளையும் அடிமாட்டு விலைக்கு அம் பானி, அதானி வகையாறாக்களுக்கு ஏலம் போட்டு  கொடுத்தவர் மோடி. அதோடு நிற்காமல், பெருமை மிகு இந்திய நாட்டின் பிரதம அமைச்சர் பதவியே அதானி, அம்பானிக்குத்தான் என்கிற வகையில், மோடியின் வெளிநாட்டு பயணங்கள் அனைத்தும், அதானி, அம்பானிக்கு பெரும் சொத்தை சேர்க்க ஏற்பாடு என்பது தெரியவந்துள்ளது.  பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டு பயணங்கள் குறி்த்து தேசியவாத காங்கிரஸ் கட்சி யின் புசியாகான் எம்.பி., மாநிலங்களவையில் கேள்வி எழுப்பியிருந்தார். இதில், 2015 ஆம் ஆண்டு முதல் இதுநாள் வரை பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்கள் எவ்வளவு, எந்தெந்த நாடுகளுக்கு அவர் பயணம்  மேற்கொண்டுள்ளார், அவற்றுக்கான மொத்த பய ணச்செலவு என்ன, இந்த பயணங்களின்போது மேற்கொள்ளப்பட்ட மொத்த ஒப்பந்தங்கள் மற்றும்  அவற்றின் தற்போதைய நிலை என்ன என்பது அவரது கேள்வி. அவரது இந்த கேள்விகளுக்கு, வெளியுறவுத் துறை இணையமைச்சர் முரளிதரன் எழுத்துப் பூர்வமான பதிலில், நரேந்திர மோடி 2015 ஆம்  ஆண்டு முதல் 2019 நவம்பர் மாதம் வரை மொத் தம் 58 நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் மேற் கொண்டுள்ளார் எனவும், இதில், அமெரிக்கா, ஜப்பான், பிரேசில், ரஷியா ,சீனா, சவுதி அரேபியா, பிரான்ஸ், இங்கிலாந்து, சிங்கப்பூர், இஸ்ரேல், ஜெர்மனி, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகள் அவரது  பயண பட்டியலில் அடங்கும். பிரதமரின் வெளி நாட்டு பயணங்களுக்காக கடந்த ஐந்தாண்டுகளில் மொத்தம் 517.82 கோடி ரூபாய் செலவிடப்பட் டுள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்தது.  இந்திய மக்களின் வரிப்பணத்தில், அம்பா னிக்கும், அதானிக்கும் ஒப்பந்தங்கள் போடுவதற் காக செல்கின்றனர் என்கிற எதிர்க்கட்சிகளின் கூற்று முற்றிலும் உண்மை என்கிற விபரங்கள் வெளிவந்துள்ளது. அந்த வகையில் 2014 ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டுவரையில் மோடியின் வெளிநாட்டு பயணங்களில் அதானி, அம்பா னிக்கு கிடைக்கப்பெற்ற ஒப்பந்தங்களின் மதிப்பு, சுமார் 6 லட்சத்து 70 ஆயிரத்து 900 கோடி ரூபாய் ஒப்பந்தங்கள் மோடியின் தயவால் கிடைத்துள் ளது. இதில், 2014 ஆம் ஆண்டில் ரூ.64 ஆயிரத்து 200  கோடி ஒப்பந்தங்களில், பிரான்ஸ் ரபேல் விமான  ஒப்பந்தத்தில் அம்பானிக்கு ரூ.58 ஆயிரம் கோடி யும், ஆஸ்திரேலியா நிலக்கரி உற்பத்தி தொடர் பான ஒப்பந்தத்தில் அதானிக்கு 6 ஆயிரத்து 200 கோடியும் ஒப்பந்தம் ஆகியுள்ளது. 2015இல்  மோடியின் ஸ்வீடன், மலேசியா, வங்காளதேசம், பாகிஸ்தான் மற்றும் சீனா வெளிநாட்டு பயணங்க ளில் ரூ.4 லட்சத்து 19 ஆயிரம் கோடிக்கு ஒப்பந் தங்கள் ஆகியுள்ளது. இதில், அம்பானிக்கு ரூ.21 ஆயிரம் கோடிக்கான ஒப்பந்தங்களும்,

அதா னிக்கு ரூ.3 லட்சத்து 98 ஆயிரம் கோடிக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. இதேபோன்று, 2016 ஆண்டு ஜப்பான், ஈரான், மொசாம்பிக் ஆகிய நாடுகளுடனான சுற்றுப்பய ணத்தில், ஈரான் சாபர் துறைமுக ஒப்பந்தத்தில்  அதானிக்கு ரூ.4 ஆயிரம் கோடி ஒப்பந்தங்கள்  கையெழுத்தாகியுள்ளது. இது தவிர ஜப்பான்  சரக்கு ரயில், மொசாம்பிக் பருப்பு ஏற்றுமதி குறித் தும் அதானிக்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி யுள்ளது. அதன் மதிப்பு வெளிவரவில்லை. மேலும், 2017 ஆம் ஆண்டு இஸ்ரேல், ரஷ்யா, மியான்மார் சுற்றுப்பயணத்தின் போது, ரூ.ஒரு லட் சத்து 8 ஆயிரத்து 700 கோடிக்கான ஒப்பந்தங்கள் போடப்பட்டு, அதில், அம்பானிக்கு ஒரு லட்சத்து  4 ஆயிரம் கோடியும், அதானிக்கு 4 ஆயிரத்து 700 கோடி ரூபாய் ஒப்பந்தங்களும் கையெழுத்தாகி யுள்ளது. 2018 ஆம் ஆண்டு, ஸ்வீடன், அமெரிக்கா, ஓமன் ஆகிய நாடுகளுடனான பயணத்தில், ரூ.75  ஆயிரம் கோடி ஒப்பந்தங்கள் அதானிக்கு கையெ ழுத்தாகியுள்ளது. இதில், ஓமனில் பொருளாதார மண்டலம் உருவாக்குவதற்கான ஒப்பந்தமும் அதானிக்கு வழங்கப்பட்டிருக்கிறது ஆனால், அதன் மதிப்பு விபரங்கள் வெளியாகவில்லை.  மோடியின் இந்த வெளிநாட்டு பயணங்களில் ஒன்றுகூட இந்திய பொதுத்துறை நிறுவனங்களின் மீதான அக்கறை சிஞ்சிற்றும் இல்லை என்ப தும், முழுமையாக பயன் அடைந்தவர்கள் அம் பானி, அதானி மட்டுமே, உலகம் சுற்றிய வாலி பனின் உண்மை முகம் வெளுத்துக்கொண்டி ருக்கிறது.