ஈரோடு, ஏப்.25- அவிநாசி - அத்திக்கடவு திட்டம் பயன்பாட்டிற்கு வருவதற்கு மேலும் ஒரு மாதம் ஆகும் என அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்துள்ளார். அத்திக்கடவு - அவிநாசி திட்டம் குறித்த ஆய்வுக் கூட்டம் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி கூறுகை யில், அத்திக்கடவு - அவிநாசி திட்டமானது ரூ.1756.88 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப் படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் 24 ஆயிரத்து 468 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும். இதற்காக 6 நீரேற்று நிலையங்கள் மற்றும் குளங்களை இணைக்க 1065 கி.மீ. தூரத்திற்கு குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 1045 குளங்களுக்கு நீர் சென்றடையும். சோதனை ஓட்டம் மூலம் 300 குளங்களுக்கு நீர் சென்றடைவதை சரிபார்க்கப்பட்டது. தண்ணீர் பற்றாக்குறை காரணமாக, மீதமுள்ள குளங்களுக்கு சோதனை ஓட்டம் மேற்கொள்ள முடியவில்லை. மே மாத இறுதிக்குள் இப்பணிகள் முடிக்கப்பட்டு, திட்டம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில் விடுபட்ட குளங்களுக்கு கூடுதல் திட்டம் கொண்டு வந்துதான் நீர் நிரப்ப முடியும், என்றார்.