ஈரோடு, ஏப். 1- பாலை கொடுத்து விட்டு உற்பத்தியாளர்கள் நட்டப்பட வேண்டுமா? என தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்க மாநில பொருளாளர் ஏ.எம்.முனுசாமி விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கேள்வி எழுப்பினார். ஈரோடு மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இதில், விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் பங் கேற்றனர். இதில், ஆவின் விவசாயிகள் கோரியபடி பால் உற்பத்தி யாளர்களுக்கு சிறப்பு பரிசு உலக பால் தினமான ஜீன்-6 அன்று வழங்கப்பட்டு வருகிறது. ஸ்பாட் அக்னாலட்ஜ்மென்ட் குறித்து தற்போதைய பொது மேலாளர் உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என ஆட்சியர் தெரி வித்தார். அப்போது குறுக்கிட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளரும், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க மாநில பொருளாளருமான ஏ.எம்.முனுசாமி, கடந்த 3 ஆண்டுகளாக இதே பதிலைத்தான் கூறி வருகின்றனர் என்றார். அதற்குப் பதிலளித்த துறை அலுவலர் ஆட்கள் பற்றாக் குறை காரணமாக செயல்படுத்த முடியவில்லை என்றார். அதுவரை உற்பத்தியாளர்கள் லிட்டருக்கு ரூ.2.50 வரை நட்டப்பட வேண்டுமா என முனுசாமி கேட்டார். உரிய நடவ டிக்கை எடுக்கப்படும் என அதிகாரிளகள் மழுப்பினர். இதேபோன்று, மாவட்டத்தில் திறக்கப்பட்ட நெல் கொள் முதல் நிலையங்கள் குறித்து சில இடங்களில் பணம் கேட்ப தாகப் புகார் தெரிவிக்கப்பட்டது. அதற்கு, ஆட்சியர், அனைத்து நெல் கொள்முதல் நிலையங்களிலும் பெயர் பலகை வைக்க வேண்டும். அதில் புகார் தெரிவிக்க தொலை பேசி எண்கள் குறிக்கப்பட வேண்டும் என்றார். இதேபோன்று விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்கத்தினர் தொடர்ந்து அடுத்தடுத்த கோரிக்கைகளை முன்வைத்தனர். இதில், இதுபோன்ற கூட்டங்களில் கோரிக்கை வைக்கிறோம், மனு கொடுக்கிறோம். அவசரமாக தங்களை நேரில் சந்திக்க வேண்டும் என்றால் என்ன செய்வது என்ற கேள்விக்கு, என்னுடைய தொலைபேசி எண் உங்களிடம் உள்ளது, தூங்கும் நேரம் தவிர எந்த நேரத்திலும் அழைக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.