districts

img

டெக்ஸ்வேலி சார்பில் ஈரோட்டில் மெகா தீபாவளி பஜார்

கோவை, அக்.12- ஈரோடு சித்தோடு அருகே பெங்களூரு - கொச்சின் தேசிய   நெடுஞ்சாலையில் டெக்ஸ்வேலி சார்பில் இந்த தீபாவளி பண்டிகை முன்னிட்டு 20 லட்சம் சதுர அடியில் மிகப்பெரிய  தீபாவளி பஜார் திறக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவையில் டெக்ஸ்வேலி துணைத் தலைவர் சி.தேவராஜன், நிர்வாக இயக்குனர் பி.ராஜசேகர், செயல் இயக்குனர் டி.பி.குமார், தலைமை செயல் அதிகாரி  சிலாஸ் பால் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தீபாவளிக்கு டெக்ஸ்வேலி என்ற முழக்கத்தோடு நாங்கள் துவக்கியுள்ளோம். வருகிற தீபாவளி பண்டிகையை இரட்டிப்பு ஆக்கும் வகையில், டெக்ஸ்வேலி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. அக்.12 தேதி முதல் அக்.16 வரை மெகா தீபாவளி பஜார் என்ற பிரம்மாண்டமான தீபாவளி விற்பனை கண்காட்சி நடைபெற இருக்கிறது. 140க்கும் மேற்பட்ட அரங்குகள் நிறைந்த இந்த கண் காட்சியினை புதனன்று ஈரோடு மாநகராட்சி மேயர்  நாக ரத்தினம் துவக்கி வைத்தார். குழந்தைகள் மற்றும் குடும்பத்தி னரை மகிழ்விக்க 50 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் பிரத்யேக  வேடிக்கை விளையாட்டு மையம் (Fun Zone), 25க்கும் மேற் பட்ட உணவகங்களுடன் கூடிய உணவு திருவிழா என  அனைத்தும் வாடிக்கையாளர்கள் பயன் பெறும் வகையில்  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கண்காட்சி விழாவில் அக்.14,15,16 ஆகிய நாட்களில் பிரபல சின்னத்திரை கலை ஞர்கள் பங்குபெறும் ஸ்டார் ஷோ நிகழ்வுகளும், அக்.20 ஆம் தேதி சங்கமம் என்ற தமிழ் கலாசார திருவிழாவும் நடை பெற உள்ளன.  இந்த தீபாவளிக்கு டெக்ஸ்வேலி விழாவில் ஸ்லோகன்  போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெரும் வாடிக்கை யாளர்களுக்கு முதல் மெகா பரிசாக ஒரு கார் ஒரு வருக்கும், இரண்டாவது பரிசாக 3 நபர்களுக்கு இருசக்கர  வாகனமும், மூன்றாம் பரிசாக 50 நபர்களுக்கு தலா ஒரு கிராம்  தங்க நாணயமும் (தினமும் 5 நபர்களுக்கு என்ற முறையில்)  வழங்கப்பட உள்ளது. இதன் தொடர்ச்சியாக கோடை கால  ஆடைச்சந்தையை முன்னிட்டு TAG EXPO EDITION - 2 என்ற  நிகழ்ச்சி 2023 ஆம் ஆண்டு ஜன.29,30,31 ஆகிய தேதி களில் நடைபெற உள்ளது, என்றனர்.

;