புதுக்கோட்டை, ஏப்.16:- அனைத்திந்திய ஜனநா யக மாதர் சங்கத்தின் ஒன்றி யக்குழு உறுப்பினர்களுக் கான ஒருநாள் அரசியல் பயிற்சி வகுப்பு ஞாயிற்றுக் கிழமை புதுக்கோட்டையில் நடைபெற்றது. புதுக்கோட்டை ஆர்.கே. நினைவகத்தில் நடைபெற்ற பயிற்சி வகுப்புக்கு மாதர் சங்கத்தின் மாவட்டத் தலை வர் எஸ்.பாண்டிச்செல்வி தலைமை வகித்தார். ‘இன் றைய இந்தியாவில் பெண் களும், மாதர் சங்கமும்’ என்ற தலைப்பில் மாநிலச் செய லாளர் எஸ்.கே.பொன்னுத் தாய் உரையாற்றினார். ‘புதுக்கோட்டை மாவட் டத்தில் பெண்கள்’ என்ற தலைப்பில் மாவட்டதுணைத் தலைவர் டி.சலோமி, ‘ஸ்தா பன விரிவாக்கம்’ என்ற தலைப்பில் மாவட்டச் செய லாளர் பி.சுசிலா ஆகியோர் உரையாற்றினர். முன்னதாக மாவட்ட துணைச்செய லாளர் ஆர்.கவிதா வரவேற்க, பொருளாளர் ஜெ. வைகைராணி நன்றி கூறினார்.