திருப்பூர், மார்ச் 25 - ஒன்றிய மோடி அரசு சமையல் எரி வாயு விலையை கடுமையாக உயர்த்தி இருப்பதை கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் எரிவாயு சிலிண்டர்க ளுக்கு மாலை அணிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. திருப்பூர் காங்கயம் ரோடு சந்திப்பில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தெற்கு கமிட்டி சார்பில் நடத்தப்பட்ட இந்த ஆர்ப் பாட்டத்துக்கு, கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் பி.செல்லதுரை தலைமை வகித்தார். கட்சியின் தெற்கு மாநகரச் செயலாளர் டி.ஜெயபால், மாநகர குழு உறுப்பினர்கள் பி.பாலன், எஸ் சரவணன், செந்தில் குமார், பா. ஞானசேகரன் உள்பட கட்சியினர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சிலிண்டர்க ளுக்கு மாலை அணிவித்து, பாடையில் தூக்கி வைத்து கண்டன முழக்கங்கள் எழுப் பப்பட்டன.