முருகன்பூண்டி நகராட்சிக் குட்பட்ட 11 ஆவது வார்டில் மார்க் சிஸ்ட் கட்சியின் சார்பில் கலைச் செல்வி வேட்புமனு தாக்கல் செய் தார். தமிழகத்தில் நகர்ப்புற உள் ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. திருமுரு கன்பூண்டி நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளது. இதில் திமுக- மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பில் இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி 1, 15, 17, 19, 20, 24 ஆகிய 6 வார்டுகளிலும், திராவிட முன்னேற் றக் கழகம் சார்பில் 2,4,5,6,7,8,9,27 ஆகிய 15 வார்டுகளிலும், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி 3வது வார்டிலும், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி 10, 22,14,16,11 ஆகிய 5 வார்டுகளிலும் போட்டியிடுகின் றன. இந்நிலையில், வியாழ னன்று 11வது வார்டு உறுப்பினர் பதவிக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் கலைச்செல்வி வேட்புமனு தாக்கல் செய்தார். இதில், திமுக ஒன்றிய பொறுப்பா ளர் பழனிச்சாமி, திருமுருகன் பூண்டி நகர பொறுப்பாளர் பாரதி, சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினர் வெங்கடாசலம், ஒன்றியச் செய லாளர் ஈஸ்வரமூர்த்தி, ஒன்றிய குழு உறுப்பினர் பாலசுப்பிரமணி யம், சிபிஐ சார்பில் ராமசாமி, கொதேமக சார்பில் சென்னியப் பன் ஆகியோர் உடனிருந்தனர்.
வெள்ளகோவில் நகராட்சி 7 ஆவது வார்டில் சிபிஎம் போட்டி
வெள்ளகோவில் நகராட்சி 7ஆவது வார்டில் மதச்சார்பற்ற முற் போக்கு கூட்டணியின் ஆதரவு பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எம்.ராதாமணி வியாழனன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். இதில், சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினர் கே.திருவேங்கட சாமி உடனிருந்தார்.
உடுமலை நகராட்சி 13 ஆவது வார்டில் சிபிஎம் வேட்புமனு தாக்கல்
உடுமலை நகராட்சியில் பழைய அக்ரஹாரம், வி.ஜி. ராவ் நகர், கண்ணப்பன் நகர், திருப்பூர் ரோடு, சாதிக்நகர், வேல்முருகன் லேஅவுட் போன்ற பகுதிகளை உள்ளடக்கிய 13 ஆவது வார்டில் போட்டியிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக உடுமலை நகரச் செயலாளர் பாலதண்டபாணி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நி லையில், வியாழனன்று உடுமலை நகராட்சி அலுவலகத்தில் உதவி தேர்தல் அதிகாரி மாலாவிடம் எஸ். ஆர்.மதுசூதனண் வேட்புமனு தாக்கல் செய்தார். இதில், திமுக நகரச் செயலாளர் மத்தீன், சிபிஎம் நகரக்குழு உறுப்பினர்கள் தோழன் ராஜா, கருப்புசாமி உள்ளிடோர் கலந்து கொண்டனர்.