கோவை, ஜன.21- மக்கள் புரட்சியின் மூலம் முதல் சோசலிச அரசை கட்டமைத்த மகத் தான தலைவர் தோழர் விளாடிமிர் லெனினின் 100 ஆவது நினைவு தினம், ஞாயிறன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அனுச ரிக்கப்பட்டது. மக்கள் புரட்சியின் மூலம் மன் னராட்சியை வீழ்த்தி, சோவியத் ரஷ்யாவை விடுதலை அடையச் செய்த மாமேதை தோழர் விளாடி மிர் லெனினின் நூற்றாண்டு நினைவு தினம் ஞாயிறன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது. அதன்ஒருபகுதியாக கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட் டக்குழு அலுவலகத்தில் தோழர் லெனின் நூற்றாண்டு நிகழ்ச்சி கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்நிகழ்வில் தோழர் லெனின் திரு வுருவ படத்துக்கு மலர்தூவி அஞ் சலி செலுத்தப்பட்டது. இதைய டுத்து நடைபெற்ற கூட்டத்திற்கு மின் அரங்கச் செயலாளர் மணிகண்டன் தலைமை வகித்தார். தோழர் லெனின் நினைவு கூறும் வகையில் கட்சியின் மாவட்டச் செயலாளர் சி. பத்மநா பன், மாவட்ட மைய இணை உறுப் பினர் ஜெயபால் ஆகியோர் சிறப்பு ரையாற்றினர். மாவட்டக்குழு அலு வலக நிர்வாகி ராமசுப்பு நன்றி கூறினார். இதேபோல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிங்காநல் லூர் நகர இடைக்குழு சார்பில், தோழர் லெனின் அவர்களின் நூற் றாண்டு நினைவஞ்சலி கூட்டம் வரத ராஜபுரம் நூல் நிலையம் அருகே நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கட் சியின் கிளைச் செயலாளர் பரம சிவம் தலைமை வகித்தார்.
இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தெய்வேந்திரன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் மகேஷ், மூர்த்தி, சிங்கை நகரக் குழு உறுப்பினர்கள் கிருஷ்ணகுமார், தமிழ்ச்செல்வன், மணிபாரதி உட்பட திரளானோர் பங் கேற்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் கோவை கிழக்கு கமிட்டியின் சார்பில், வடகோவை காமராஜபுரம் லெனின் நினைவுதின கூட்டம் கிளைச் செயலாளர் இளையராஜா தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் கள் யு.கே.சிவஞானம், என்.ஆர். முருகேசன், மாவட்டக்குழு உறுப்பி னர் என்.ஜாஹிர் மற்றும் கலாசு தொழிலாளர்கள் கலந்து கொண்ட னர். இதேபோன்று சிபிஎம் கோவை மேற்கு நகரக்குழு அலுவலகம் முன்பு மாமேதை லெனின் நூற் றாண்டு நினைவஞ்சலி கூட்டம் நடைபெற்றது. கட்சியின் மேற்கு நக ரச் செயலாளர் முருகன், சிஐடியு மாவட்டச் செயலாளர் கிருஷ்ண மூர்த்தி உட்பட பலர் கலந்து கொண் டனர். தருமபுரி மாமேதை தோழர் லெனின் நூற் றாண்டு நினைவு தின நிகழ்ச்சி, தரும புரி மாவட்டம், செங்கொடிபுரத்தில் ஞாயிறன்று நடைபெற்றது. அங்கு வைக்கப்பட்டிருந்த தோழர் லெனின் உருவப்படத்திற்கு கட்சியின் மாவட் டச் செயலாளர் ஏ.குமார் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதில் சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் இரா.சிசுபாலன், மூத்த தோழர் பி. இளம்பரிதி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கிரைஸாமேரி, ரவி, ஒன்றியச் செயலாளர் என்.கந்த சாமி, மாவட்டக்குழு உறுப்பினர் கள் கே.பூபதி, ஆ.ஜீவானந்தம், அன்பு, சக்திவேல் ஆகியோர் கலந்து கொண்டனர். இதேபோன்று பாப்பிரெட்டிப்பட்டி பேருந்து நிலை யம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சி யில் கட்சியின் வட்டச் செயலாளர் தி.வ.தனுசன், மாவட்டக்குழு உறுப் பினர் சி.வஞ்சி, எஸ்.தீர்த்தகிரி, மனோகரன், கிருஷ்ணவேணி உட் பட பலர் கலந்து கொண்டனர்.