சேலம், நவ.1- பால் கொள்முதல் விலையை உயர்த்த வலியுறுத்தி நவம்பர் 22 ஆம் தேதியன்று கோட்டையை நோக்கி பேரணி மற்றும் காத்திருப்பு போராட் டம் நடத்தப்படும் என தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத் மாநிலக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங் கத்தின் மாநிலக்குழு கூட்டம் மாநிலத் தலைவர் கே.முகமது அலி தலைமை யில் சேலம் மாவட்டம், சங்ககிரியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சங்கத் தின் பொதுச்செயலாளர் பி.பெருமாள், பொருளாளர் ஏ.எம்.முனுசாமி, தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சாமி நடராஜன், துணைத் தலைவர்கள் எம்.சிவாஜி, எம்.சங்கர், செயலாளர் பி.இராமநாதன், தீர்த்தகிரி எஸ்.மணி, விவசாயிகள் சங் கத்தின் மாவட்ட செயலாளர் ஏ.ராம மூர்த்தி மற்றும் பால் உற்பத்தியாளர் கள் சங்கத்தின் நிர்வாகிகள் பங்கேற்ற னர். இதில், பாலுக்கு கொள்முதல் விலையை லிட்டருக்கு பத்து ரூபாய் உயர்த்தி பசும்பாலுக்கு 42 ரூபாயும், எருமை பாலுக்கு 51 ரூபாயும் வழங்க வேண்டும். பால் உற்பத்தியாளர்க ளுக்கு வழங்க வேண்டிய பாக்கிகள் முழுவதும் மற்றும் ஊக்கத்தொகை, போனஸ் உடனடியாக வழங்க வேண் டும். இந்தத் தொகையை பங்கு தொகை யில் சேர்த்த கூடாது. குழந்தைகள் சத்துணவு திட்டத்தில் ஆவின் பாலை யும் பால் பொருட்களையும் வழங்க நட வடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இக்கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் நவம்பர் 22ஆம் தேதி சென்னை கோட்டை முன்பு பேரணியும் காத்தி ருப்பு போராட்டம் நடத்துவது என தீர்மா னம் நிறைவேற்றப்பட்டது.