கோவை, நவ.24 - பரம்பிக்குளம் அணையில் பொருத்தப்பட்டிருந்த மதகு உடைந்து நீர் கசிவு ஏற்பட்ட நிலை யில், அதனை பராமரிக்கும் பணி கள் துவங்கப்பட்டு தற்போது 90சதவிகிதம் முடிவடைந்துள்ள தாக துறை அதிகாரிகள் தெரிவித் துள்ளனர். பரம்பிக்குளம் -ஆழியாறு பிஏபி திட்டத்தில் மேல் நீராறு, கீழ் நீராறு, சோலையாறு, பரம்பிக்குளம், தூணக்கடவு, பெருவாரிப்பள்ளம், ஆழியாறு, அப்பர் ஆழியாறு, திருமூர்த்தி என 9 அணைகள் உள்ளன. இதில் பரம்பிக்குளம் அணை பிஏபி திட்டத்தில் உள்ள தொகுப்பு அணைகளில் அதிக கொள்ளளவு கொண்டது. 17 டி.எம்.சி.க்கும் அதிகமாக கொள்ளளவு கொண்ட இந்த அணை, ஒருமுறை நிரம்பி விட்டால் ஒரு ஆண்டு பாசனத் துக்கும், குடிநீருக்கும் பற்றாக் குறை ஏற்படாது. பிஏபி திட்டத்தில் தமிழகத்தில் 4.25 லட்சம் ஏக்கர் விளை நிலம், கேரளவில் 22 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இந்நிலையில், பரம்பிக்குளம் அணையின் மதகு கடந்த செப் டம்பர் 20ஆம் தேதி உடைந்ததால் அணையில் இருந்து 6 டிஎம்சி தண்ணீர் வெளியேறியது. மதகு உடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து நீர்ப் பாசனத் துறை அமைச்சர் துரைமுருகன் நேரில் ஆய்வு செய்தார். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தர விட்டார். அடுத்தடுத்து அமைச் சர்களும் நேரில் ஆய்வு செய்து வந்தனர். மேலும், ரூ.7.2 கோடி நிதி ஒதுக்கப்பட்டு மதகு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி தற்போது 90 சதவிகிதம் நிறைவடைந்துள்ளது. டிசம்பர் முதல் வாரத்துக்குள் பணிகள் முழு மையாக முடிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இப்பணிகளை, கோவை மண்டலத் தலைமைப் பொறி யாளர் முத்துசாமி, பிஏபி கண்கா ணிப்புப் பொறியாளர் தேவ ராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் மேற் பார்வை செய்து வருகின்றனர். பரம்பிக்குளம் அணை மதகு உடைப்பு ஏற்பட்டதால் குடிநீருக்கு பாதிப்பு ஏற்படும் என சிலர் தெரி வித்தனர். ஆனால், அதிகாரிகள் தங்கள் நீர் மேலாண்மை திறமை யின் மூலம் தற்போது வரை பாச னத்துக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் தண்ணீர் வழங்கி வரு கின்றனர். இதனால் மதகு உடைப் பால் திருமூா்த்தி அணையில் இருந்து பாசனம் பெறும் பகுதிகள் பாதிப்படையவில்லை என அதி காரிகள் தெரிவித்தனர்.