districts

img

பழைய கமிசன் முறையே தொடர வேண்டும்

கோவை, நவ.22- எல்ஐசி முகவர்களுக்கான பழைய கமிஷன் முறையையே நடைமுறைப்படுத்த வேண்டும் என கோவையில் வெள்ளியன்று எல்ஐசி முகவர்கள் சங்கத்தினர் (லிகாய்) தர்ணாவில் ஈடுபட்டனர். முகவர்களுக்கான புதிய கமி சன் முறையை ரத்து செய்துவிட்டு, பழைய கமிசன் முறையை நடை முறைப்படுத்த வேண்டும். குறைந் தபட்ச காப்புத் தொகையை ரூ.1 லட் சமாக குறைத்திட வேண்டும். அனைத்து திட்ட பாலிசிகள் எடுப் பதற்கு அதிக பட்ச நுழைவு வயதை 65 ஆக உயர்த்த வேண்டும். பாலிசி தாரரை பாதிக்கும் காப்பீட்டின் மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண் டும். பாலிசிகளுக்கான போனஸ் தொகையை அதிகப்படுத்த வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி எல்ஐசி முகவர்கள் சங் கத்தினர் (லிகாய்) வெள்ளியன்று தர்ணாவில் ஈடுபட்டனர். கோவை சிவானந்தா காலனி யில் நடைபெற்ற தர்ணாவிற்கு, கோவை கோட்டத் தலைவர் எஸ். கே.பிரேம்குமார் தலைமை வகித் தார். கோட்ட பொதுச்செயலாளர் ச.கோவர்த்தன் வரவேற்றார். முன் னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், லிகாய் முகவர் சங்கத்தின் தென் மண்டல தலைவருமான ஏ.வி.பெல் லார்மின் போராட்டத்தை துவக்கி வைத்து உரையாற்றினார். சிஐடியு கோவை மாவட்டச் செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, தென் மண் டல இன்சூரன்ஸ் ஊழியர் சங்க இணைச்செயலாளர் வி.சுரேஷ், லிகாய் கேரள மாநில செயல் தலை வர் சி.சந்திரன், தமிழ்நாடு மாநில செயலாளர் பி.குமார், ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் சி.தங்கவேல் ஆகியோர் வாழ்த்தி பேசினர். லிகாய் தமிழ் மாநிலத் தலைவர் ஏ.பூவ லிங்கம் தர்ணாவை நிறைவு செய்து  பேசினார். முடிவில் கோட்டப் பொரு ளாளர் என்.லிங்கசாமி நன்றி கூறி னார்.