நாமக்கல், ஜூன் 30- அரசு பள்ளியில் குழந்தைகளை சேர்க்க வலியுறுத்தி நாமக்கல்லில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் நகராட்சிக் குட்பட்ட ஆவரங்காடு ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் அரசு பள்ளிகளில் குழந்தைகளை படிக்க வைப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்த துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. பள்ளியிலிருந்து துவங்கிய பேரணி இ,ஆர்.தியேட்டர், பெரியார் நகர், காந்திபுரம், அக்னி மாரி யம்மன் கோவில், பாரதியார் தெரு ஆகிய பகுதிகளுக்கு சென்று நிறைவாக பள்ளி வளாகத்தில் வந்தடைந்தது. இப் பேரணியில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆர்வத் துடன் திரளாக பங்கேற்றனர்.