அவிநாசி, ஆக.9– “கார்ப்பரேட்டுகளை புறக்க ணிப்போம்” என்ற முழக்கத்துடன் பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி அவிநாசியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழி லாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்தில், நக ரங்களுக்கும் விரிவுப்படுத்த வேண் டும். ஆண்டுக்கு 200 நாள் வேலை யும், ரூ.600 தினக்கூலியும் வழங்க வேண்டும். வருமான வரி செலுத் தும் அளவுக்கு வருவாய் இல்லாத குடும்பங்களுக்கு மாதந்தோறும் ரூ.7500 நிவாரணம் வழங்க வழங்க வேண்டும். விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று இலவச மின்சார சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். விளைபொருட்களுக்கு ஒன்றரை மடங்கு கொள்முதல் விலையும், அனைத்து பயிர் களுக்கும் இன்சூரன்சும் வழங்க வேண்டும். தனியாருக்கு கொடுப் பதை கைவிட்டு, பயிர் காப்பீடு திட்டத்தை ஒன்றிய அரசு ஏற்று நடத்த வலியுறுத்தி “வெள்ளை யனே வெளியேறு” இயக்க நாளன்று, அவிநாசி புதிய பேருந்து நிலையம் முன்பு தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், விவ சாய தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் சண்முகம், விவசாயிகள் சங்க ஒன்றிய தலைவர் முத்து ரத்தினம் ஆகியோர் தலைமை வகித்தனர். இதில் விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர். குமார், மாவட்டத் துணைச்செய லாளர் எஸ்.வெங்கடாசலம், மாவட்டத் துணைத்தலைவர் கொளந்தசாமி, விவசாய தொழி லாளர் சங்க மாவட்டச் செய லாளர் பஞ்சலிங்கம், மாவட்டப் பொருளாளர் மணியன், விவ சாயிகள் சங்க வடக்கு ஒன்றிய தலைவர் அப்புசாமி, பால் உற்பத்தி யாளர் சங்க மாவட்டச் செயலாளர் வேலுச்சாமி, விதொச ஒன்றிய தலைவர் முருகேசன், வடக்கு ஒன்றிய செயலாளர் சுப்பிரமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.