உதகை, நவ.20- உதகை தாவரவியல் பூங்கா அருகே நடமாடிய சிறுத்தை பூனையை வனத்துறை யினர் பிடித்து, வனப்பகுதியில் விடுவித் தனர். நீலகிரி மாவட்டம், உதகை அரசு தாவர வியல் பூங்காவில் ஆயிரக்கணக்கான மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. இதை ரசிப்பதற்காக தினந்தோறும் ஆயிரக்கணக் கான பொதுமக்கள் வருகின்றனர். கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக் கப்பட்டது. அந்த சமயத்தில் தாவரவியல் பூங்காவில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிக ரித்ததாக கூறப்பட்டது. அப்போது தாவர வியல் பூங்காவில் காலில் காயத்துடன் சுற்றித்திரிந்த சிறுத்தை ஒன்றை வனத் துடன் மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். கொரோனா பொதுமுடக்கம் முடிந்த பிறகு பூங்கா சுற்றுலா பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டது. இதனால் வனவிலங்குகள் நடமாட்டம் குறைந்தது. இந்நிலையில், தாவரவியல் பூங்கா பகுதியில் உள்ள கவர்னர் மாளிகை அருகில் புதரில் சிறுத்தை போன்று சத்தம் கேட்டது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் அருகில் சென்று பார்த்தனர். அப்போது அருகில் சென்று பார்த்தபோது, சிறுத்தை இல்லை என்பதும், சிறுத்தை பூனை என்பதும் தெரியவந்தது. இதை சுற்றுலா பயணிகள் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். மேலும், இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சிறுத்தை பூனையை வனத்துறையினர் பிடித்து வனப் பகுதியில் விடப்பட்டது.