திருப்பூர், அக். 27 - சென்னையில் தொழிலாளர் நல வாரிய ஆலோசனை கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்த ரராசன், ஏஐடியுசி பொதுச் செயலாளர் டி.எம்.மூர்த்தி, தொமுச பொதுச் செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் மாநில அரசின் தொழிலாளர் நல ஆலோசனை வாரிய உறுப்பினராக திருப்பூர் தெற்கு எம்எல்ஏ செல்வராஜ் கலந்து கொண்டார்.