உடுமலை, மார்ச் 21- உடுமலையில் பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு இலவச வமாக பயிற்சி அளித்துவரும் பகத்சிங் சிலம்பம், களரி மார்சி யல் ஆர்ட்ஸ் அறக்கட்டளை ஆசான் சி.வீரமணிக்கு ஆதிதிரா விடர் நலத்துறையின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. உடுமலை மற்றும் மடத்துக்குளம் பகுதியில் உள்ள ஆதிதி ராவிட விடுதி பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு உடுமலை பகத்சிங் சிலம்பம், களரி மார்சியல் ஆர்ட்ஸ் அறக்கட்டளை ஆசானும், தமிழ்நாடு களரி பைட் அசோசியேசன் மாநிலச் செய லாளருமான சி.வீரமணி வாரத்தில் இரண்டு நாட்கள் சிலம்பம் மற்றும் களரி பயிற்சி அளித்து வந்தார். இவரது இலவச சேவையைப் பாராட்டி மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை யின் சார்பில் திருப்பூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்கு டியினர் நலத்துறை அலுவலர் ரவிச்சந்திரன், காங்கேயம் தனி வட்டாட்சியர் கனிமொழி ஆகியோர் சால்வை அணிவித்து பாராட்டு சான்றிதழ் வழங்கினர். மாணவியர்களுக்கு சிறப்பாக இலவச சிலம்ப பயிற்சி அளித்து வருவதாக பரிந்துரை செய்த தாராபுரம் மகளிர் விடுதி காப்பாளர் சாந்தகுமாரி, அலுவலக கண்காணிப்பா ளர் கோவிந்தராஜ் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். ஆசான் வீரமணிக்கு உடுமலை கிளை நூலகம் எண் இரண்டு நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் தலைவர் இளமு ருகு, துணைத் தலைவர் சிவக்குமார், நூலக வாசகர் வட்ட ஆலோசகர் ஐயப்பன், மகளிர் வாசகர் வட்ட தலைவர் நல்லாசி ரியர் விஜயலட்சுமி, பணி நிறைவு நூலகர் கணேசன் மற்றும் நூலகர்கள் கலாவதி, மகேந்திரன், பிரமோத், அஷ்ரப், சித் திகா மற்றும் நூலக வாசகர் வட்ட உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.