districts

நிதிச் சிக்கலில் பின்னலாடை நிறுவனங்கள் வங்கிகள் உதவி செய்யக் கோரிக்கை

திருப்பூர், மே 12-  வரலாறு காணாத பருத்தி மற்றும் நூல் விலை உயர்வு காரணமாக அதிக தொகை செலவிட நேரிடுவதால், திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் நடைமுறை மூலதனம் போதா மல் அவதிப்படுவதாகவும், வங்கிகள் தேவையான உதவி செய்ய வேண்டும் என்றும் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் ராஜா எம்.சண் முகம் இது தொடர்பாக பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் தினேஷ் குமார் காராவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியி ருப்பதாவது, திருப்பூர் பின்னலாடை துறை கடும் நெருக் கடியான சூழ்நிலையை சந்தித்து வருகிறது. குறிப்பாக முன் னெப்போதும் இல்லாத அளவுக்கு பருத்தி விலை கடந்த ஆண்டை விட இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. அதற் கேற்ப நூல் விலையும் இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது. இத னால் பின்னலாடை தயாரிக்கும் சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களும், ஜாப் ஒர்க் நிறுவனங்களும் மிகவும் குழப் பமான நிலையில் உள்ளன. எனவே, அரசு மற்றும் வங்கிக ளிடம் இருந்து உதவியை எதிர்பார்த்து நிற்கின்றன. கடந்த 18 மாதங்களுக்கு முன்பு 200 ரூபாய்க்கு ஒரு கிலோ  நூல் வாங்க முடிந்தது. ஆனால், இன்று அதே 200 ரூபாய்க்கு  400 கிராம் நூல் மட்டும்தான் வாங்க முடியும். இதனால் தொழிற்சாலைகளின் நடைமுறை மூலதனம் முழுவதும் நூல் வாங்குவதிலேயே செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. எனினும் பற்றாக்குறையான நிலையில், வங்கி கள் உதவி செய்ய வேண்டிய தேவை உள்ளது. போதுமான பணம் இல்லாமல் ஏற்றுமதி நிறுவனங்கள் கடும் நெருக் கடியில் தவித்து வருகின்றன. எனவே சிறு, குறு, நடுத்தர நிறு வனங்கள் நெருக்கடியின் அலையில் இருந்து மீடேறுவதற்கு வங்கிகள் போதுமான நிதி உதவி கடன் தர வேண்டும் என்று  திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.