districts

img

மகிழ்ச்சியான ஞாயிறு கொண்டாட்டம் பொது மக்கள் உற்சாகமாகப் பங்கேற்பு

திருப்பூர், ஜூன் 11 - திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் மகிழ்ச்சியான ஞாயிறு கொண்டாட்டம் நடத்தப்பட்டதில் பொது மக்கள், குழந்தைகள், இளைஞர்கள் திரளானோர் உற்சாகமாகப் பங்கேற்றனர். திருப்பூர் எஸ்.ஆர்.நகர் தெற்கு பகுதியில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு போட்டிகளுடன் கூடிய இந்த மகிழ்ச்சியான ஞாயிறு நிகழ்வை தமிழ் வளர்ச்சி  மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன்  துவக்கி  வைத்தார். மாதந்தோறும் ஒரு ஞாயிறன்று மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் மற்றும் சிறுவர்,  சிறுமிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளுடன் கூடிய பொழுதுபோக்கு தினமாக மகிழ்ச்சியான ஞாயிறு கொண் டாடப்படும் என கடந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப் பட்டிருந்தது.  அதன் முதற்கட்டமாக ஜூன் 11 ஞாயிறன்று திருப்பூர்  மாநகராட்சி  நான்காவது மண்டலம் எஸ்.ஆர்.நகர் பகுதியில்  மகிழ்ச்சியான ஞாயிறு நிகழ்வு துவங்கப்பட்டது. இ நிகழ்விற்கான இலச்சினையை மாநில தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிமுகப் படுத்தி வைத்து, நிகழ்வை துவக்கி வைத்தார்.  இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ், மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர், சார் ஆட்சியர் ஸ்ருதன் ஜெய்  நாராயணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக நிமிர் படத்தின் நாயகி பார்வதி நாயர் கலந்து கொண்டு நடனமாடி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொதுமக்கள் மற்றும் இளைஞர்களை உற்சாகப்படுத்தினார். தொடர்ந்து இளைஞர்களின் பெருஞ் சலங்கை ஆட்டம், கும்மியாட்டம், காவடியாட்டம், ஒயி லாட்டம் ஆகியவை நடைபெற்றன.  மேலும், இளைஞர்களுக்கான டி.ஜே நடனமும் ஏற்பாடு  செய்யப்பட்டிருந்தது. இதில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டு உற்சாகத்துடன் நடனம் ஆடினர். இதே  போல் சிறுவர், சிறுமியர்களுக்கு பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும், ஓவியப் போட்டிகளும் நடைபெற்றன.  இதேபோல் மாதந்தோறும் ஒவ்வொரு பகுதியில் மகிழ்ச்சி யான ஞாயிறு நிகழ்வு சிறப்பாக நடத்தப்படும், அடுத்த மாதம்  இரண்டாவது மண்டலத்தில் நடத்தப்படுவதாக மேடை யிலேயே அறிவிக்கப்பட்டது. தமிழ் வளர்ச்சித் துறை அமைச்ச ராக பொறுப்பேற்ற பின்பு தனது மாவட்டத்திலேயே பாரம் பரிய கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வது மகிழ்ச்சி அளிப்பதாகவும், நமது பாரம் பரிய கலை நிகழ்ச்சிகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கு இது போன்ற நிகழ்ச்சிகள் உந்துதலாக இருக்கும்  எனவும் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார்.  சிறியவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என ஒரு புறம் மகிழ்ச்சியை வெளிப்படுத்த மாநகராட்சி மேயர் ந. தினேஷ்குமார், மாநகராட்சி  ஆணையாளர் பவன்குமார், சார்  ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் ஆகியோரும் சாலை யில் நடனமாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி பங்கேற்ற  பொதுமக்களையும் உற்சாகப்படுத்தினர்.