தருமபுரி, மார்ச் 27- சுக்கனேரி ஏரியை ஆக்கிரமித்து மண்ணை கொட்டி சுடுகாடு அமைக் கும் ஊராட்சி மன்ற தலை வரின் கணவரின் செயலுக்கு பாசன விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், இச்செயலை மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்தி நீர்நிலையை பாது காக்க வேண்டும் என வலி யுறுத்தியுள்ளனர். தருமபுரி மாவட்டம், காரி மங்கலம் ஒன்றியத்திற்குட் பட்டது. பெரியாம்பட்டி ஊராட்சி, இந்த ஊராட்சிக்குட்பட்டது சுக்கனேரி ஏரி. இந்த ஏரி சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. மழைகாலங்களில் நீர் நிரம்பி இருக்கும் இந்த ஏரியின் மூலம் விருதாகவுண்டனூர், பெரியாம்பட்டி, பூதாளன்கொட்டாய், ஆகிய கிராமங்களில் உள்ள விவசாய கிணறு களுக்கு நீர்மட்டமாக உள்ளது. இந்நிலையில், பெரியாம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமியின் கணவர் சங்கர், ஊராட்சி நிர்வாகத்தில் தலையிட்டு வருவதாக இவ்ஊராட்சி மக்கள் குற்றஞ் சாட்டுகின்றனர். மேலும், இவர் ஊராட்சி மக்களுக்கு சுடுகாடு வசதி ஏற்படுத்துவதற்க்காக சுக்க னேரி ஏரியில் சுமார் அரை ஏக்கர் பரப்பள வில் மண்கொட்டி நிரவி வருகிறார். நீர்நிலையை ஆக்கிரமிப்பு செய்து சுடு காடு அமைக்க அப்பகுதி விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தும், இதனை பொருட் படுத்தாமல் சங்கர் மண்கொட்டி நிரவி வருகிறார். எனவே, ஏரியை ஆக்கிரமிப்பு செய்து சுடுகாடு அமைக்கும் நடவடிக்கையை கை விட்டு வேறு இடத்தில் சுடுகாடு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்மென பாசன விவசாயிகள், மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.