districts

img

சர்வதேச டேக்வாண்டோ போட்டி: சேலம் மாணவி தேர்வு

சேலம், ஜன.18- சர்வதேச பல்கலைக்கழங்களுக்கு இடையேயான டேக்வாண்டோ போட்டி யில் இந்தியா சார்பில் சேலம் மாணவி பங்கேற்க உள்ளார். கடந்த ஜன.9 ஆம் தேதி முதல் ஜன.11 ஆம் தேதி வரை பஞ்சாப் மாநிலம், அமிர் தசரஸில் அமைந்துள்ள குருநானக் தேவ் பல்கலைக்கழகத்தில் 2022-23 ஆம் ஆண்டிற்கான அகில இந்திய பல்க லைக்கழக டேக்வாண்டோ போட்டிகள் நடைபெற்றன. இதில் தமிழ்நாடு விளை யாட்டு மேம்பாட்டு ஆணயத்தின் எம்ஐ எம்எஸ் திட்டத்தின் கீழ் பயிற்சி பெறும் அனுஷியா பிரியதர்ஷினி, மதுரை காம ராஜர் பல்கலைக்கழகத்தின் சார்பில் 62 கிலோ எடை பிரிவில் பங்கேற்று தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இவர் பல்கலைக் கழகங்களுக்கு இடையேயான டேக் வாண்டோ போட்டிகளில் பதக்கம் வெல் வது இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சேலத்தில் அமைந்துள்ள அத்தீனா டேக்வாண் டோ பயிற்சி மையத்தில் சிறப்பு டேக் வாண்டோ பயிற்சி பெற்று வருகிறார். மேலும், தென்னிந்தியாவிலிருந்து உலக டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் பில் பங்கேற்ற முதல் பெண் அனுஷியா பிரியதர்ஷினி என்பது குறிப்பிடத்தக் கது. இவர் வரும் ஜூலை மாதம் சீனா  நாட்டில் நடைபெறவுள்ள சர்வதேச பல் கலைக்கழகங்களுக்கு இடையேயான டேக்வாண்டோ போட்டியில் இந்தியா சார்பில் விளையாட தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். இதனால் மகிழ்ச்சிய டைந்த அனுஷியா பிரியதர்ஷினிக்கு அவர் பயிலும் திண்டுக்கல் ஜிடிஎன் கலைக்கல்லூரியின் தாளாளர், கல்லூரி இயக்குநர், உடற்கல்வி இயக்குநர், பேராசிரியர்கள் மற்றும் உதவி பேராசி ரியர்கள், மாணவர்கள் தங்களது வாழ்த் துக்களை தெரிவித்துள்ளனர்.