தருமபுரி, அக்.7- தருமபுரியில் சர்வதேச பாதுகாப் பான கருக்கலைப்பு தினத்தை முன் னிட்டு கருத்தரங்கம் நடைபெற்றது. சர்வதேச பாதுகாப்பான கருக் கலைப்பிற்கான தினத்தை முன் னிட்டு காமன்ஹெல்த் மற்றும் டீப்ஸ் அமைப்பு சார்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் தருமபுரி சந்திரா மஹாலில் நடைபெற்றது. இந்த கருத் தரங்கிற்கு, பெண்கள் வளர்ச்சி நிறு வன நிர்வாகி தனலட்சுமி தலைமை வகித்தார். தோழி கூட்டமைப்பு தலை வர் எம்.சங்கர், சமூக நலத்துறை ஊழி யர் ஆனந்தி, மக்கள் நல்வாழ்வு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் சுரேஷ், குழந்தைகள் நல மைய தலைவர் சரவணன், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க நகர செயலா ளர் நிர்மலா ராணி ஆகியோர் கருத் தரங்கில் உரையாற்றினர். அனைத்து ஆரம்ப சுகாதார நிலை யங்களிலும், கருக்கலைப்பிற்கான மேம்படுத்தப்பட்ட நிலையை உறுதி செய்ய வேண்டும். தேவையற்ற கற் பம் எனில், ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து கருகலைப்பிற்கான உரிமையை வழங்க வேண்டும். கருக் கலைப்பு செய்யும் பெண்களுக்கு சமூக பாதுகாப்பு திட்டங்கள் கிடைக்க உறுதிசெய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. முன்னதாக, பெண் தொழிலா ளர்கள் பணிபுரியும் தொழிற்சாலை மற்றும் தனியார் நிறுவனங்களில் பெண்கள் புகார் தெரிவிக்க, புகார் பெட்டி அமைப்பது குறித்து பிரச்சா ரத்தின் ஒரு பகுதியாக உள் புகார் பெட்டியை சமூக நலத்துறை ஊழி யர் ஆனந்தி வெளியிடார். இதனை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க நகர செயலாளர் நிர்மலா ராணி பெற்றுக்கொண்டார். தோழி கூட்ட மைப்பு நிர்வாகி வேல்விழி நன்றி கூறினார்.