சேலம், ஜூலை 26- சேலம் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட உள் ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் ஒப்பந்த மற்றும் சுய உத விக்குழு மூலம் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு பணி களை நிரந்தரப்படுத்தி காலமுறை ஊதியம் வழங்க வேண் டும் என சிஐடியு சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர் சங்கம் சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஏ.கோவிந்தன் தலைமை தாங்கினார். இதில் சிஐடியு மாவட்ட செயலா ளர் டி. உதயகுமார், மாநில குழு உறுப்பினர்கள் எஸ்.கே.தியா கராஜன், ஆர்.வெங்கடபதி, மாவட்ட நிர்வாகி கருப்பண்ணன் ஆகியோர் உரையாற்றினர். இதில் ஏராளமான தூய்மை பணி யாளர்கள் பங்கேற்றனர்.