திருப்பூர், ஜூன் 25- திருப்பூரில் தனியார் பள்ளி வாகனங்கள் வட்டார போக்கு வரத்து துறை அலுவலர்களால் ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் துவங்கி நடை பெற்று வருகிறது. தனியார் பள்ளிகளில் மாணவர்களை அழைத்து வர பல்வேறு பகுதிகளுக்கு பள்ளி வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆண்டுக்கு இருமுறை போக்குவரத்து துறை அலுவலர்கள் மூலம் பள்ளி வாகனங்கள் ஆய்வு மேற்கொள்ளப்படும். இந்த சூழ் நிலையில் பள்ளி துவங்கிய நிலையில் திருப்பூர் தெற்கு மற்றும் வடக்கு வட்டார போக்குவரத்து துறை அலுவலர் கள் சனிக்கிழமை திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல் லூரி மைதானத்தில் கல்வி நிலையங்களின் வாகனங்களை ஆய்வு செய்தனர். திருப்பூர் தெற்கு மற்றும் வடக்கு போக்குவரத்து துறைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளின் வாகனங் கள் சுமார் 850-க்கும் மேல் இங்கு ஆய்வு மேற்கொள்ளப்பட் டது. இந்த ஆய்வின்போது பள்ளி பேருந்துகளில் அவசர கால வழி, முதலுதவி பெட்டி, தீயணைப்பு கருவி, மாணவ மாணவியர்கள் ஏறுவதற்கு வசதியாக படிக்கட்டுகள் உள் ளதா என்பது குறித்து அலுவலர்கள் ஒவ்வொரு வாகனமாக பரிசோதித்துப் பார்த்தனர்.