தருமபுரி, ஜன.22- அரூர் - சித்தேரி சாலையில் இடையூ றாக உள்ள மரங்களை அகற்றி, வாகன விபத்துகள் நிகழாதவாறு தார்ச்சாலை பணியை முடிக்க நெடுஞ்சாலைத்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண் டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தி யுள்ளனர். தருமபுரி மாவட்டம், அரூர் - சித்தேரி வரையிலான தார்ச்சாலை 26 கி.மீ. தூரம் கொண்டது. இச்சாலை வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இச்சா லையை சுமைதாங்கி மேடு, முத்துக் கவுண்டர் நகர், எல்லப்புடையாம்பட்டி, செல்வசமுத்திரம், குடுமியாம்பட்டி, கௌப்பாறை, ஈட்டியம்பட்டி, கீரைப் பட்டி, தாதராவலசை, வாழைத்தோட் டம், தோல்தூக்கி, சித்தேரி உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன் படுத்தி வருகின்றனர். தற்போது தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில், அரூர் முதல் தாதராவலசை வரையிலும் 10.5 கி.மீ. தொலைவுக்கு சுமார் ரூ.11 கோடி மதிப்பீட்டில் தார்ச்சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. சித்தேரி சாலையில் முத்துக்கவுண் டர் நகர், கௌப்பாறைற ஆகிய இடங் களில் தார்ச்சாலையின் மிக அருகில் 10க்கும் மேற்பட்ட மரங்கள் போக்கு வரத்துக்கு மிகவும் இடையூறறாக உள் ளன.
இந்த மரங்களை அகற்றுவதற்கு வனத்துறையினர் அனுமதி அளிக்க வில்லை. இதனால் அந்த இடங்களில் மட்டும் தார்ச்சாலை அமைக்காமல் மற்ற இடங்களில் தார்ச்சாலை அமைக்கப் பட்டுள்ளது. அதன்படி அரூர் முதல் கீரைப்பட்டி வரை சுமார் 6 கி.மீ. தொலை வுக்கு புதிதாக தார்ச்சாலை அமைக் கப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் விடுபட்டுள்ள இடங்கள் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இவ்வழியாக செல்லும் வாகனங்கள் நிலைதடுமாறுகின்றறன. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 10க்கும் மேற்பட்ட வாகன விபத்துகள் நிகழ்ந்துள்ளன. எனவே, வாகன விபத்துகளைத் தடுக்க அரூர் - சித்தேரி சாலையில் மிக வும் ஆபத்தான வகையில் உள்ள சாலை யோர மரங்களை அகற்றுவதற்கு வனத் துறையினர் அனுமதி வழங்க வேண் டும். அதேசமயம் சாலை பணி மேற் கொள்ளும் ஒப்பந்ததாரர் சார்பில், சித் தேரி சாலையின் இருபக்கமும் 100க்கும் மேற்பட்ட மரங்கன்றுகளை புதிதாக நடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வனத்துறை, தேசிய நெடுஞ் சாலைத்துறை இணைந்து அரூர் - சித் தேரி சாலையில் விடுபட்டுள்ள இடங்க ளில் தார்ச்சாலை அமைப்பதற்கான பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியு றுத்தி உள்ளனர்.