districts

img

மருந்து விற்பனையில் ஆன்லைன் வர்த்தகம் மக்களுக்கு ஆபத்தானது: திருப்பூர் சிறப்பு கருத்தரங்கில் தகவல்

திருப்பூர், மார்ச் 6 - இந்தியாவில் மருந்து விற்ப னையில் ஆன்லைன் வர்த்தகத்தை அனுமதித்திருப்பது மக்களுக்கு ஆபத்தானது, போலி மருந்துகள் அதிகளவில் விற்கப்படுகின்றன என்று அகில இந்திய மருந்து மற் றும் விற்பனைப் பிரதிநிதிகள் சங் கங்களின் கூட்டமைப்புத் தலைவர்  ஆர்.ரமேஷ் சுந்தர் கூறினார். தமிழ்நாடு மருந்து மற்றும் விற்ப னைப் பிரதிநிதிகள் சங்கத்தின் சார் பில் திருப்பூரில் செவ்வாயன்று மக் களுக்கான மருத்துவ, மருந்துக்  கொள்கைகள்: நோக்கமும், நிலை மையும் என்ற தலைப்பில் சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது. கிளைச் செயலாளர் மு.சங்கரன் தலைமையில் நடைபெற்ற இக்க ருத்தரங்கில் அகில இந்திய மருந்து  மற்றும் விற்பனைப் பிரதிநிதிகள் சங்கங்களின் கூட்டமைப்புத் தலை வர் ஆர்.ரமேஷ் சுந்தர் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது:  இந்திய மருந்துத் துறை இந்திய மருந்துத் துறையில் ரூ. 2  லட்சம் கோடிக்கு வர்த்தகம் நடை பெறுகிறது. நாடு சுதந்திரம் பெற்ற போது இந்த துறைக்கு ரூ. 5 கோடி  மட்டுமே ஒதுக்கப்பட்டது. ஆனால் இப்பொழுது மிகப்பெரும் வளர்ச்சி அடைந்துள்ளது. முதல் பிரதமர் நேரு காலத்தில்  மக்களின் சுகாதாரம், ஆரோக்கியம் ஆகியவற்றுக்காக பொதுத்துறை மருந்து நிறுவனங்கள் உருவாக் கப்பட்டன. அதன் மூலம் மக்க ளுக்கு தேவையான மருந்துகள் குறைந்த விலையில் கிடைத்தன.   எனினும் பன்னாட்டு நிறுவனங்கள்,  தனியார் நிறுவனங்கள் மருந்து துறையில் லாபம் ஈட்ட முயற்சித்த னர். 1970 காலகட்டத்தில் உயிர்  காக்கும் மருந்துகள், அத்தியாவ சிய மருந்துகள், இதர வகை மருந் துகள் என பிரிக்கப்பட்டு விலை  கட்டுப்பாட்டு கொள்கை உருவாக் கப்பட்டது. இதில் உயிர் காக்கும் மருந்துகளுக்கும், அத்தியாவசிய மருந்துகளுக்கும் விலை நிர்ண யத்தில் கட்டுப்பாடுகள் இருந்தன.  இதர மருந்துகளுக்கு 100% லாபம் வைத்து விலை நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று இருந்தது. மருந்து துறையில் நாம் தன்னி றைவு அடைந்துள்ளோம். 1991இல் உலகமய, தாராளமய  கொள்கைகள் அமலாக்கப்பட்ட நிலையில் இந்த விலை கட்டுப் பாட்டு கொள்கையை நீர்த்துப் போகச் செய்ய தொடர்ந்து முயற்சி கள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.  எனினும் முதலாவது ஐக்கிய முற் போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில்  இடதுசாரிகள் ஆதரவு இருந்த நிலையில் மருந்து துறையில் பன் னாட்டு நிறுவனங்களின் கொள்ளை  லாப முயற்சிக்கும், காப்புரிமை என்ற பெயரில் இந்திய மருந்து துறையில் ஆதிக்கம் செலுத்தும் முயற்சிக்கும் கடிவாளம் இடப் பட்டது.

கட்டுப்பாட்டை நீக்கிய மோடி

ஆனால் 2014 ஆம் ஆண்டு மோடி தலைமையில் பாஜக அரசு  அமைந்த பிறகு விலை கட்டுப் பாட்டுக் கொள்கை தளர்த்தப்பட் டது. கட்டுப்பாடு நீக்கப்பட்டது. உயிர் காக்கும் மருந்துகள் 75 சதவி கிதம் லாபம் வைத்தும், அத்தியா வசிய மருந்துகள் 100 சதவிகிதம் லாபம் வைத்தும் விற்கலாம். மற்ற  மருந்துகளுக்கு எந்த விலை கட்டுப் பாடும் இல்லாமல் எவ்வளவு லாபம்  வைத்து வேண்டுமானால் விற்க லாம் என மாற்றிவிட்டனர்.  இதனால்  சாமானிய மக்களுக்கு கிடைக்க வேண்டிய உயிர் காக்கும் மற்றும் அத்தியாவசிய மருந்துகள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.  மோடி அரசு சாதனை நிகழ்த்தி யதாக கூறும் ஆயுஷ்மான் பாரத்  திட்டத்திலும் மிகப்பெரிய ஊழல் கள் நடைபெற்றுள்ளன என்று இந்திய தலைமை தணிக்கை அதி காரியின் அறிக்கையில் கூறப்பட் டுள்ளது. அதுமட்டுமின்றி மருத்துவத்து றைக்கு முக்கியமான ஆம்புலன்ஸ்  வாகனங்கள் மற்றும் மருத்துவ உப கரணங்களுக்கு இந்த அரசு கடுமை யான ஜிஎஸ்டி வரி விதித்துள்ளது. கொரோனா தடுப்பூசிக்குக் கூட ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டது. கல் வியும், மருத்துவமும் அரசின்  கட்டுப்பாட்டில் இருந்தால்தான் மக் களின் ஆரோக்கியம், நல்வாழ்வு காக்கப்படும். ஆனால் தற்போது மருத்துவத்துறை தனியார் லாபம்  ஈட்டும் வேட்டைக்காடாக மாற்றப் பட்டுள்ளது. 

முன்னிலை வகிக்கும் தமிழ்நாடு

இந்தியாவிலேயே தமிழகத் தில் தான் மருத்துவத்துறை கட்ட மைப்பு சிறப்பாக உள்ளது. தமிழ் நாட்டையும் கேரளாவையும் தாண்டி மற்ற மாநிலங்களுக்கு சென்றால் மக்களுக்கு மருத்துவ வசதி என்பது எட்டாக்கனியாக உள் ளது. ஆரம்ப சுகாதார நிலையங்க ளுக்கோ, அரசு மருத்துவமனைக ளுக்கோ, மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கோ செல் லும் வாய்ப்பு உத்தரப்பிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்களில் இல்லை. தமிழ்நாட்டில் மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்ற முறையில் 27 அரசு மருத்துவக் கல் லூரிகள் உள்ளன. ஆனால் குஜ ராத்தில் ஐந்து அரசு மருத்துவக்  கல்லூரிகள் தான் உள்ளன. தமிழ் நாட்டில் இந்த கட்டமைப்பை பயன் படுத்தி ஏராளமான மருத்துவர்கள் சிறப்பு மருத்துவர்கள் உருவாக்கப் பட்டுள்ளனர். வடமாநிலங்களில் அத்தகைய நிலை இல்லை. எனவேதான் நீட் தேர்வு என்ற பெயரில் வட மாநிலங்களில் இருந்து படித்து வரக்கூடியவர்கள் தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத் துவக் கல்லூரிகளில் நுழைகின்ற னர். தமிழ்நாட்டில் தரம் இல்லை என் பதற்காக நீட் தேர்வை எதிர்க்க வில்லை. இங்கு பெற்றிருக்கும் முன்னேற்றத்தை பாதுகாப்ப தற்கும், தமிழ்நாட்டு மாணவர்க ளின் மருத்துவ கல்வி வாய்ப்பு பறிக் கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக வும் தான் நீட் தேர்வை எதிர்க்கின்ற னர். ஆன்லைன் வணிகம் கூடாது அதேபோல் மருந்து என்பது மக் களின் நம்பிக்கை சார்ந்த முறையில்  மருத்துவர்கள் அணுகி நேரடியாக வாங்க வேண்டிய விஷயமாகும். ஆன்லைன் முறையில் மருந்து விற்பனை செய்வது மிகப் பெரிய  அளவு போலி மருந்துகள் விற்ப னைக்கு வழிவகுக்கும். இது மக்க ளின் உயிருக்கு ஆபத்தானதாகும்.  ஏற்கனவே இந்தியாவில் ஏராள மான போலி மருந்துகள் சந்தையில்  உள்ளன. எனவே மருந்து விற்பனை யில் ஆன்லைன் முறையை தடை செய்ய வேண்டும். இவ்வாறு ஆர். ரமேஷ் சுந்தர் கூறினார். முன்னதாக இணைச் செயலா ளர் பி.கவின்குமார் வரவேற்றார். திருப்பூர் இந்திய மருத்துவச் சங் கம் துணைத் தலைவர் எம்.பி. ஆதார் செந்தில்குமார், இந்திய  மருத்துவச் சங்கம் மாநில கவுன்சில்  உறுப்பினர் ஜி.தரணிகுமார், தமிழ் நாடு மருந்து வணிகர்கள் சங்க  இணைச் செயலாளர் பி.லட்சும ணன் ஆகியோர் கருத்துரை ஆற்றி னர். சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ் வாழ்த்திப் பேசி னார். மருந்து விற்பனையில் ஆன் லைன் வர்த்தகத்தைத் தடை செய்ய  வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மருந்து விற்பனைப் பிரதிநி திகள் உள்பட திரளானோர் கலந்து  கொண்டனர். முடிவில் சங்கத்தின் மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.பாலாஜி நன்றி கூறினார்.