தாராபுரம், அக். 10 - தாராபுரம் அருகே முறையாக குடிநீர் விநி யோகம் மேற்கொள்ள வலியுறுத்தி தனிநபர் சத்தியாகிரக போராட்டம் நடைபெற்றது. தாராபுரம் அருகே உள்ள கவுண்டச்சி புதூர் ஊராட்சிக்குட்பட்ட காந்திநகர் பகுதியில் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு காந்திநகர் பகுதியில் உள்ள மின்மோட்டார் மூலமாக குடிநீர் வழங்கப் பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 2 மாதங் களுக்கு முன்பு குடிநீர் மோட்டார் பழுதடைந் ததில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்ப டவில்லை. இதனால் குடிநீருக்காக பொதுமக் கள் அக்கம்பக்கத்தில் உள்ள பகுதிகளில் போர்வெல் பைப்புகளில் தண்ணீர் பிடிக்கும் நிலை உருவானது. இதுகுறித்து கவுண்டச்சிபுதூர் ஊராட்சி நிர்வாகம், தாராபுரம் வட்டார வளர்ச்சி அலுவ லர் ஆகியோரிடம் மனு அளித்தும் எந்த நடவ டிக்கையும் எடுக்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து 6 ஆவது வார்டு பகுதியை சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளை நிர்வாகி செங்குட்டுவன் கட்சி கொடியுடன் தாராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அமர்ந்து கழுத்தில் பதாகையை தொங்க விட்டு தனிநபர் சத்தியாகிரக போராட்டத் தில் ஈடுபட்டார். அப்போது சிபிஎம் தாலுக்கா செயலாளர் என்.கனகராஜ் உடனிருந்தார். போராட் டத்தை அடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர் ஜீவானந்தம், 6ஆவது வார்டு காந்திநகர் பகுதி யில் ஆய்வு மேற்கொண்டு உடனடியாக இன்றே மின் மோட்டார் பொருத்தி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என எழுத் துப்பூர்வமாக உறுதியளித்தார். இதைத் தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.