திருப்பூர் ஆக. 2 - அரசியல் ஆதாயத்தோடு, அதிகார எல்லை மீறி செயல்படும் கருவலூர் அரசு மேல்நிலைப்பள்ளி மேலாண்மை குழு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இந்திய மாணவர் சங்கத்தின் திருப் பூர் மாவட்ட செயலாளர் சா.பிரவீன், மாவட்ட தலைவர் க.சு.கல்கிராஜ் ஆகி யோர் செவ்வாயன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசு பள்ளிகளை பாதுகாத்தும், அடிப்படை வசதிகளை மேம்படுத்திட கேட்டும் தொடர்ந்து போராடி வரும் மாணவர் சங்கத்தின் மீது கருவலூர் அரசுப்பள்ளி மேலாண்மை குழுவைச் சேர்ந்த சிலர் அவதூறு பரப்புவதை இந்திய மாணவர் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட குழு வன்மையாக கண்டிக்கி றது. கருவலூர் அரசு மேல்நிலைப் பள்ளி யில் மாணவர் நலனுக்கு எதிராக அவர் களை மனஉளைச்சலுக்கு ஆளாக்கும் பல்வேறு செயல்கள் நடைபெறுவதாக வும், அடிப்படை வசதிகள் முறையாக இல்லாமல் இருப்பதாகவும் வந்த தகவ லின் பேரில் மாணவர் சங்க தலைவர்கள் பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியரி டம் கோரிக்கை வலியுறுத்தி பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது பள்ளி மேலாண்மை குழு வில் இருந்து வந்திருப்பதாக கூறி, அரசி யல் பின்புலம் கொண்ட சிலர், மாணவர் சங்க தலைவர்களை தவறாக பேசியும், மிரட்டியும் உள்ளனர். மேலும் உண் மைக்கு புறம்பாக மாணவர் சங்கம் குறித்து அவதூறும் பரப்பி வருகின்ற னர். பொதுவாக பள்ளி மேலாண்மை குழு என்பது மாணவர்கள், ஆசிரியர் கள் நலனுக்காக பள்ளிக்கு வளர்ச் சிக்காக செயல்பட வேண்டும். ஆனால் கருவலூர் பள்ளியில் மாணவர் விரோத போக்குடன், ஜனநாயகத்திற்கு எதிராக செயல்படுகின்றனர். பள்ளிக்கும், மாணவர்களுக்கும் உறுதுணையாக இருப்பதற்கு பதிலாக அரசியல் ஆதா யத்திற்காக பள்ளி மேலாண்மை குழுவை பயன்படுத்தி, மாணவர் நல னுக்கு எதிராக செயல்படுவோர் மீது உட னடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதன்மை கல்வி அலுவ லர் கேட்டுக் கொள்வதாக தெரிவித்துள் ளனர்.மேலும் இப் பிரச்சனை தொடர் பாக முதன்மை கல்வி அலுவலர் இட மும் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர்.