districts

img

முப்படை தலைமை தளபதி உயிரிழந்த இடத்தில் இந்திய கப்பற்படை தளபதி நேரில் ஆய்வு

உதகை, மார்ச் 17- குன்னூரில் ராணுவ ஹெலி காப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உயிரிழந்த இடத் தில், இந்திய கடற்படை தளபதி அட் மிரல் ஆர்.ஹரிகுமார் ஆய்வு மேற் கொண்டார். இந்திய முப்படை தலைமை தள பதி பிபின்ராவத் மற்றும் அவருடைய  மனைவி உட்பட 14 பேர் சூலூர் விமானப் படை தளத்தில் இருந்து குன்னூர்  வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூ ரிக்கு ராணுவ ஹெலிகாப்டரில் கடந்த ஆண்டு டிச.9 ஆம் தேதி சென்று கொண் டிருந்தனர். அப்போது ஹெலிகாப் டர் குன்னூர் அருகே உள்ள நஞ்சப்ப சத்திரம் அருகே சென்று கொண்டி ருந்தபோது, விபத்தில் சிக்கியது. இவ்விபத்தில் 14 பேரும் உயிரிழந்த னர். இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு, மோசமான வானிலை காரணமாக விபத்து நடந்ததாக  அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந் நிலையில், வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சி கல்லூரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, இந்திய கடற்படை தளபதி அட்மிரல் ஆர்.ஹரிகுமார் உதகை வந்தார். இதன்பின், நிகழ்ச்சிகள் நிறைவடைந்த தும், அவர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும், அங்கு விபத்து நடந்தது எப்படி என்பது குறித்தும் ராணுவ  அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்துக் கொண்டார். இதைத்தொடர்ந்து, விபத் தில் உயிரிழந்தவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்திய அவர், விபத்தை நேரில் பார்த்த நஞ்சப்பசத்திரம் கிராம மக்களிடமும் விபத்து குறித்து கேட்ட றிந்தார். பின்னர் அவர் அங்கிருந்து வெலிங்டன் புறப்பட்டு சென்றார்.