districts

img

எரிபொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

தருமபுரி, மார்ச் 24- எரிபொருட்களிள் விலை உயர்வை கண்டித்து விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என இந்திய கம்யூனிஸ்ட்  கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர் தருமபுரி யில் செய்தியாளர்களிடம் கூறுகை யில், ஐந்து மாநில தேர்தல் முடிந்த வுடன் பெட்ரோல், டீசல் விலையை ஒன் றிய அரசு ஏற்றியுள்ளது. இந்த விலை ஏற்றத்தால் அத்தியவாசிய பொருட் களின் விலை உயரும். சமையல் எரி வாயு சிலிண்டர் விலையும் ரூ.50 உயர்ந் துள்ளது. எனவே, எரிபொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட் டம் நடத்தப்படும். இலங்கை பொருளாதார நெருக் கடியில் சிக்கித் தவித்து வருகிறது. இலங்கை மக்கள் தமிழகத்திற்கு அகதி களாக வருவது தொடங்கிவிட்டது.

அப்படி வந்த ஆறு பேரை தமிழ்நாடு போலீஸ் கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். எனவே ஒன்றிய அர சும், மாநில அரசும் ஆழ்ந்து யோசித்து இலங்கையிலிருந்து வரும் மக்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண் டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில், 100 நாள் வேலை என்பதை 200 நாட்களாக உயர்த்தி, தினக்கூலியாக ரூ.600 வழங்க வேண்டும். தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையிலும் நல்ல திட்டங்கள் அறி விக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதிய திட் டம் குறித்து எந்த அறிவிப்பும் இல்லை  என்பது வருத்தத்தை அளிக்கிறது. தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழிற்பேட்டைக்கு நிதி ஒதுக்கீடு செய்து உடனடியாக தொழில் தொடங்க வேண்டும். தருமபுரி மாவட் டத்தில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் 2  ஆவது திட்டம் அறிவிக்கப்பட்டுள் ளது. எனவே, நிதி ஒதுக்கீடு செய்து  குடிநீர் பற்றாக்குறையை போக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும். தருமபுரி ஏ.ரெட்டிஅள்ளி கிராமத்தில் சுமார் 1000க்கும் மேற்பட்ட பட்டியலின மக்க ளுக்கு தமிழ்நாடு அரசு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வீட்டுமனை பட்டா வழங்கியதை  மாவட்ட நிர்வா கம் ரத்து செய்துள்ளது. எனவே, தமிழ் நாடு அரசோ, மாவட்ட நிர்வாகமோ இந்த மக்களுக்கு உடனடியாக நில  அளவீடு செய்து பட்டா வழங்க வேண் டும். இவ்வாறு இரா.முத்தரசன் கூறி னார். முன்னதாக, இப்பேட்டியின்போது கட்சியின் மாநில துணைச்செயலாளர் மு.வீரபாண்டியன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஜி.பழனிசாமி, ந.நஞ் சப்பன், மாவட்டச் செயலாளர் எஸ். தேவராசன், மாவட்ட துணைச்செயலா ளர் கா.சி.தமிழ்க்குமன், மாவட்ட பொருளாளர் எம்.மாதேஸ்வரன் ஆகி யோர் உடனிருந்தனர்.