உதகை, ஜூன் 19- ஊட்டியில் தக்காளி விலை கிடு கிடுவென அதிகரித்து வருகிறது. கிலோ ரூ.50 க்கு விற்பனை செய்யப் படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர் உள் ளிட்ட இடங்களில் விளைவிக்கப் படும் மலை காய்கறிகளான கேரட், பீட்ரூட், முள்ளங்கி, உருளை கிழங்கு, பீன்ஸ், முட்டைகோஸ், காலிபிளவர், மேரக்காய் உள்ளிட்ட காய்கறிகள் தமிழகத்தின் பல் வேறு இடங்கள் மற்றும் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்க ளுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. இதேபோல் சம வெளி பகுதிகளில் விளையும் தக் காளி, கத்தரிக்காய், வெண்டைக் காய், வெங்காயம் நீலகிரிக்கு சரக்கு வாகனங்களில் உழவர் சந்தை மற்றும் மார்க்கெட்டுக ளுக்கு கொண்டு வரப்பட்டு விற் பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஒரு மாத மாக சமவெளி பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்வதால் விளை நிலங்க ளில் காய்கறிகள் அழுகும் நிலை ஏற்பட்டது. மழை காரணமாக விளைச்சலும் பாதிக்கப்பட்டது. இதனால் நீலகிரி மாவட்டத்திற்கு கொண்டு வரப்படும் தக்காளி கடந்த சில நாட்களாக கிடுகிடு வென விலை அதிகரித்து வருகிறது. ஊட்டி உழவர் சந்தையில் திங்க ளன்று நாட்டுத் தக்காளி கிலோ ரூ.44க்கும், ஊட்டி மார்க்கெட்டில் தக்காளி கிலோ ரூ.50 முதல் ரூ.60க்கும் விற்பனை செய்யப்பட் டது.
இதனால் சில்லரை விற்பனை கடைகளில் கிலோ ரூ.65க்கு விற் பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து வியாபாரிகள் கூறு கையில், நீலகிரி மாவட்டத்திற்கு தினசரி 2,000 கிலோ தக்காளி கொண்டு வரப்படுகிறது. இதன்படி கர்நாடக மாநிலம் மைசூரிலிருந்து 75 சதவிகிதமும், காரமடை மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்து 25 சதவிகிதமும் கொண்டு வரப்படு கிறது. கடந்த மாதம் பெய்த தொடர் மழையால் தக்காளி வரத்து குறைந்து, விலை அதிகரித்து வருகிறது. விரை வில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்பதால் இந்த விலை உயர்வு குறைய வாய்ப்பு இல்லை. இதனால் தக்காளி விலை மேலும் அதிகரிக்கலாம். மேட்டுப்பாளை யம் தக்காளி விலை அதிகமாக இருப்பதால் தற்போதைய நிலையில் மைசூரில் இருந்து மட்டுமே தக் காளி கொள்முதல் செய்யப்படுகி றது. இதேபோல் கத்திரிக்காய் கிலோ ரூ.54க்கும் சின்ன வெங்கா யம் கிலோ ரூ.75க்கும் உழவர் சந் தையில் விற்பனை செய்யப்பட்டது, என்றனர். உழவர் சந்தையில், வெண்டைக் காய் ரூ.50, பெரிய வெங்காயம் ரூ.22, அவரைக்காய் ரூ.70, புட லங்காய் ரூ.30, பீர்க்கங்காய் ரூ.50, சுரைக்காய் ரூ. 24, பாகற்காய் ரூ.60, கொத்தவரை ரூ.30, பூசணிக்காய் ரூ.20, அரசாணிக்காய் ரூ.24, உரு ளைக்கிழங்கு ரூ. 45, கேரட்-ரூ.50, பீட்ரூட் ரூ.35, முள்ளங்கி ரூ.28, நூல் கோல் ரூ.28, முருங்கைக்காய் ரூ.40க்கும் விற்பனை செய்யப்படு கிறது.