districts

img

கேபிள் டிவி சேனல்களின் கட்டணங்கள் உயர்வு திருப்பூரில் கேபிள் ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர், பிப். 24 - தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிராய்) அனுமதியைத் தொடர்ந்து தனியார் டிவி சேனல்களின் கேபிள் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. மக்களுக்கு சுமையாக உள்ள இந்த கட்டண உயர்வைக் கண்டித்து திருப்பூ ரில் தமிழ்நாடு கேபிள் டிவி ஆபரேட்டர்கள்  பொதுநல சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தி னர். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கம் முன்பாக வெள்ளியன்று நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு கேபிள்  டிவி ஆபரேட்டர்கள் பொது நல சங்கத்தின்  மாநிலத் தலைவர் எம்.வீரமுத்து தலைமை வகித்தார். இதில் மாவட்டச் செயலாளர் எஸ். பிரகாஷ், மாவட்டப் பொருளாளர் எம்.குமார்,  நிர்வாகிகள் பி.ஆர்.கஜேந்திரன், எஸ்.ராஜன், கே.சிவபிரகாஷ், பி.பாலகுமாரன் உள்பட கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பெருந் திரளானோர் கலந்து கொண்டனர். இடுவாய் ஊராட்சிமன்றத் தலைவர் கே.கணேசன்,  

ஏ.பெரியபாளையம் ஊராட்சிமன்ற வார்டு  உறுப்பினர் வி.எம்.அண்ணாதுரை ஆகியோ ரும் இதில் பங்கேற்றனர். தனியார் கட்டணச் சேனல்கள் தங்கள் கட்டணத்தை உயர்த்திக் கொள்ளலாம் என்று  டிராய் அனுமதி வழங்கியது. இதைக் காரணம்  காட்டி சன் டிவி, விஜய் டிவி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஜீ தமிழ் உள்ளிட்ட சேனல்கள்  தங்கள் கேபிள் கட்டணத்தை மிக அதிகமாக  உயர்த்தியுள்ளனர். பொது மக்களுக்கு சுமையை ஏற்றும் இந்த கட்டண உயர்வை  கார்ப்பரேட் முதலாளிகள் கைவிட வேண்டும் என்று கேபிள் ஆபரேட்டர்கள் முழக்கம் எழுப்பினர். குறிப்பாக ஒவ்வொரு தனியார் கட்டண சேனல்களும் விளம்பரங்கள் மூல மாக பல கோடி ரூபாய் விளம்பர வருமா னம் ஈட்டுகின்றனர். அபரிமிதமான லாபம்  ஈட்டக்கூடிய இந்த கார்ப்பரேட் பெருமுத லாளிகள் டிராய் அனுமதியை காரணம் காட்டி  பொது மக்களிடம் கேபிள் கட்டணத்தை உயர்த்துவது அநியாயம். இந்த கட்டணக்  கொள்ளைக்கு ஒன்றிய அரசின் தலைமை யில் செயல்படக்கூடிய டிராய் அமைப்பும் துணை போகிறது என்று கண்டனம் தெரிவித் தனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் நிறைவாக தமி ழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொது  நலச் சங்கத்தின் நிர்வாகிகள் திருப்பூர் மாவட்ட ஆட்சியரகத்தில் சம்பந்தப்பட்ட அதி காரிகளைச் சந்தித்து கேபிள் டிவி கட்டண உயர்வை கைவிட உரிய நடவடிக்கை எடுக்க  வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தனர்.