திருப்பூர், ஜன.2- தாராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு புதிய கட்டி டம் கட்டும் பணியை அமைச்சர்கள் துவக்கி வைத்தனர். திருப்பூர் மாவட்டம், தாராபுரம் ஊராட்சி ஒன்றியம், நாஞ்சியம்பாளையம் ஊராட்சி, அரசு தொழிற்பயிற்சி நிலை யம் எதிரில், தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டா லின் கடந்த டிச.19 ஆம் தேதி ரூ.5.90 கோடி மதிப்பீட்டில் தாரா புரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டினார். இந்நிலையில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வ ராஜ் ஆகியோர் வியாழனன்று புதிய கட்டிடம் கட்டும் பணியை துவக்கி வைத்தனர்.