திருவண்ணாமலை, ஆக.11- திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தில் புதிய நீதிமன்றத்தை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணகுமார், பங்கேற்று துவக்கி வைத்தார். 2012 ஆம் ஆண்டு கலசப்பாக்கம் தனி தாலுக்கா வாக அறிவிக்கப்பட்டது. இந்த வட்டத்தில் கலசப்பாக்கம், கடலாடி, கேட்டவரம்பாளையம் என 3 குறு வட்டங்கள் இயங்கி வருகின்றன. இங்கு வசிக்கும் மக்கள் வழக்குக ளுக்காக போளூர் நீதி மன்றத்துக்கு செல்ல வேண்டியிருந்தது. இதனால், கலசப்பாக்கம் வட்டத்துக்கு என தனி நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, கலசப்பாக்கத்தில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் அமைக்க ப்பட்டது. வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் உள்ள கட்டடத்தில் அமைக்கப்பட்ட இந்த நீதிமன்றத்தை ஞாயிறன்று (ஆக.11) சென்னை உயர்நீதி மன்ற நீதிபதிகள் டி. கிருஷ்ண குமார், தமிழக இந்துசமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் ஆகியோர் திறந்துவைத்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட நீதிபதி சி.திருமகள், திரு வண்ணாமலை மக்களவை உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி, மாவட்ட காவல் கண்காணி ப்பாளர் சிபி.சக்கரவர்த்தி, சட்டமன்ற உறுப்பினர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். முன்னதாக, திரு வண்ணாமலை ஒருங்கிணை ந்த நீதிமன்ற வளாகத்தில், எஸ்.சி, எஸ்.டி வழக்கு பிரிவுகளுக்காக சிறப்பு நீதிமன்றம் துவக்கப்பட்டது.