districts

img

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துக

தருமபுரி, டிச.27- பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி தமிழ் நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் அனைத்து அரசுத்துறை அலுவலகங்கள் முன்பு ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, அனைத்து ஊழியர் களுக்கும் பழைய ஓய்வூதிய திட் டத்தை அமல்படுத்த வேண்டும்.  சத்துணவு, அங்கன்வாடி, வரு வாய் கிராம உதவியாளர்கள்,  எம்.ஆர்.பி., செவிலியர்கள், ஊர்ப் புற நூலகர்கள், கணினி இயக்கு பவர்கள், மகளிர் திட்ட ஊழி யர்கள், குழந்தைகள் பாதுகாப்பு திட்ட ஊழியர்கள், வன பாது காப்பு ஊழியர்கள் உள்ளிட்டவர் களை நிரந்தரப்படுத்தி, காலமுறை  ஊதியம் வழங்க வேண்டும்.   சாலைப்பணியாளர்களின் 41  மாத பணி நீக்க காலத்தை பணிக் காலமாக மாற்றி வழங்க வேண்டும். தமிழக அரசுத் துறை களில் சுமார் 6 லட்சம் பணியிடங் களை நிரப்ப வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதன்ஒருபகுதியாக, தரும புரி மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் முன்பு பெருந்திரள் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. ஆர்ப் பாட்டத்திற்கு, தருமபுரி வட்ட தலைவர் குமரன், மேற்கு வட்ட  தலைவர் பன்னீர்செல்வம் ஆகி யோர் தலைமை வகித்தனர். மாநில  துணைத்தலைவர் கோ.பழனியம் மாள், மாவட்ட செயலாளர் ஏ. சேகர், மாவட்ட நிர்வாகிகள் கே. புகழேந்தி, காசிலிங்கம்,  சிவமணி,  ராஜ்கண்ணு ஆகியோர் பேசினர். இதோபோல் பாலக்கோடு வட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு பாலக்கோடு வட்ட தலை வர் தமிழ்செல்வன் தலைமை வகித் தார். மாவட்டத் தலைவர் எம்.சுருளி நாதன்,  மாவட்ட துணைத்தலைவர்  குணசேகரன், வட்டச் செயலாளர் மாணிக்கம்  ஆகியோர் கோரிக்கை களை விளக்கி பேசினர். இதேபோன்று காரிமங்கலம், அரூர், பாப்பிரெட்டிபட்டி, நல்லம் பள்ளி, பென்னாகரம் ஆகிய வட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

உதகை

நீலகிரி மாவட்டம், உதகை  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு அரசு ஊழியர் சங்க மாவட்ட  தலைவர் சலீம் தலைமை வகித் தார். இதில், மாவட்ட செயலாளர்  ஆனந்தன், முன்னாள் மாவட்ட  செயலாளர் ஆஸ்ரா, ஊரக  வளர்ச்சித்துறை சங்க நிர்வாகி  சிவக்குமார், நெடுஞ்சாலைத் துறை ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஈரோடு

தமிழ்நாடு அரசு ஊழியர்  சங்கம் சார்பில் ஈரோடு மாவட்ட  ஆட்சியர் அலுவலகம், பெருந் துறை உள்ளிட்ட மாவட்டத்தின் பல் வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. இதில், மாவட்ட தலைவர் ஏ.ராக்கிமுத்து, செய லாளர் எஸ்.விஜயமனோகரன், பொருளாளர் ஆர்.சுமதி உள் ளிட்ட நிர்வாகிகளும், திரளான ஊழியர்கள் பங்கேற்றனர். இதே போன்று நம்பியூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு  ஊழியர் சங்க வட்டக்கிளை தலைவர் மகாலிங்கம் தலைமை வகித்தார். செயலாளர் கருப்பு சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சேலம்

சேலம் நாட்டாண்மை கழக  கட்டிடம் முன்பு சேலம் வட்டக் கிளை தலைவர் சி.முருகப் பெருமாள் தலைமையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழ் நாடு அரசு ஊழியர் சங்க சேலம்  மாவட்ட செயலாளர் சுரேஷ்,  மாவட்ட தலைவர் திருவேரங்கன், மாவட்ட பொருளாளர் செல்வம், மாவட்ட நிர்வாகிகள் அர்த்தனாரி, வள்ளிதேவி, அமராவதி, தமிழ் நாடு அரசு அனைத்து துறை ஓய்வூ தியர் சங்க மாவட்ட செயலாளர் ராஜ்குமார் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.