districts

img

என்றாவது விடிவு வரும் என்றால் அது கம்யூனிஸ்ட்டுகளால் தான் சாத்தியம்

உழைக்கும் மக்கள் நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு என்றைக்காவது இந்தி யாவிற்கு விடிவு வரும் என்றால் அது கம்யூ னிஸ்ட்டுகளால்தான் சாத்தியம் என சிபிஎம்  மாநில செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ்  நம்பிக்கை தெரிவித்தார். விடுதலை போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னோடிகளில் ஒரு வரான தோழர் பி.ராமமூர்த்தி நினைவு தின கருத்தரங்கம், பவானியில் நடைபெற்றது. இந்நிகழ்வில், கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ் பங்கேற்று உரை யாற்றியதின் சுருக்கம். சென்னை ராஜதானி யின் முதல் எதிர்க்கட்சி தலைவர். பன்முகத்தி றமை, சிறந்த ஆளுமைமிக்க தலைவர்  தோழர் பி.ராமமூர்த்தி. பல தலைவர்களின்  வரலாறை, தியாகங்களை இளைய தலைமு றைக்கு சொல்ல வேண்டியிருக்கிறது. விடுத லைப்போராட்ட வீரர் என்.சங்கரய்யாவைப் பற்றி பத்திரிக்கைகள் நேர்மையானவர், எளி மையானவர் என்று பொதுவாக எழுதுவார் கள். எளிமையும், நேர்மையும் அவர்களு டைய அடையாளமல்ல. கம்யூனிஸ்ட்டாக இருப்பதன் உடன் நிகழ்வுதான் எளிமையும், நேர்மையும். அதன் உச்சத்திற்கு அருகே சென்றவர்கள் கொண்டாடப்படுகிறார்கள். அந்த வகையில், தோழர் பி.ராமமூர்த்தி கொண்டாடப்படுகிறார்.  பொதுவாக கம்யூனிஸ்ட் கட்சியை பிராம ணர்கள் கட்சி என்பார்கள். இந்தியாவில் தீண் டாமைக்கெதிராக போராடியதில் கம்யூ னிஸ்ட் கட்சியின் தலைவர்களே முன்னணி யில் இருந்தனர். சென்னையில் திருவல்லிக் கேனி பார்த்தசாரதி கோயிலில் அருந்ததிய  மக்களுக்கு வழிபட உரிமை இல்லை என்ற  நிலையில், பி.ராமமூர்த்தி, அந்த கோவிலில் அருந்ததியர்களை அறங்காவலர் குழு விற்கே தேர்ந்தெடுக்க வைத்தார். இதனை,  மகாத்மா காந்தி யங் இந்தியா பத்திரிக்கை யில் புகழ்ந்து விபரமாக எழுதுகிறார்.  தென்மாவட்டங்களில் கைரேகை சட்டம்  என்ற கொடிய சட்டம் இருந்தது. ஒரு குறிப் பிட்ட சமூகம் திருமணமான முதல் நாளாக  இருந்தாலும் சரி, என்னவாக இருந்தாலும் சரி  காவல் நிலையத்தில் தான் படுக்க வேண்டும். வெளியூருக்குப் போகவேண்டுமென்றால் சொல்லிவிட்டுத்தான் போக வேண்டும் என்று  வைத்திருந்தார்கள். அதற்கு எதிராகப் போராடி அந்த கொடிய சட்டத்தை திரும்பப்  பெற வைத்தவர் தோழர் பி.ராமமூர்த்தி.  பாம்பையும், பார்ப்பானையும் பார்த்தால்  முதலில் பார்ப்பானை அடி என்றவர் பெரி யார். ஆனால், 1957 தேர்தலில் கம்யூனிஸ்ட்  கட்சியின் வேட்பாளர் ஏ.பாலசுப்பிரமணி யான பிராமணருக்கு வாக்கு கேட்டார் பெரி யார். சூத்திரனாக இருந்துகொண்டு இந்த விச யங்களைப் பேசுவதொன்றும் வித்தியாச மில்லை. பிராமண சமூகத்தில் பிறந்திருக்கும்  பாலசுப்பிரமணியம் அருந்ததிய மக்களின் மேம்பாட்டிற்காக பேசுகிறார் என்றால், அவ ரைப்போல 10 பேர் வந்தால் நாம் தனியாக  இயக்கத்தை நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்றார் பெரியார். அன்று ராம மூர்த்தியை எதிர்த்து பி.டி.ராஜன் நின்றார்.  அப்போது ராமமூர்த்திக்கு ஆதரவாக பெரி யார் பிரச்சாரம் செய்தார். இதையெல்லாம்  இளைய தலைமுறைக்கு சொல்லவேண்டியி ருக்கிறது. 

தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆங்கிலத்தில்  பேசுவது வழக்கம். அதை முதலில் உடைத்து,  தமிழை எப்படி பயன்படுத்த வேண்டும் என்ப தில் எதிர்க்கட்சி தலைவராக இருந்த தோழர்  பி.ராமமூர்த்தி முன்வைத்தது முக்கிய மானது.  மொழிவாரி மாநிலத்தில் முன்நின்ற வர்கள் கம்யூனிஸ்ட்டுகள். இப்படி பேசிக் கொண்டே போகலாம். விடுதலை பெற்ற பிறகு பிஎச்இஎல் உருவாவதற்குக் காரணமா னவர். அந்நிறுவனத்தை சீமென்ஸ் என்கிற  ஜெர்மன் நிறுவனத்திற்கு விற்க முயற்சி  செய்தனர். அதை எதிர்த்து நாடாளுமன் றத்தில் போட்ட சண்டையினால்தான் பிஎச்இ எல் இன்றைக்கும் பொதுத்துறை நிறுவன மாக நீடிக்கிறது. இந்திய பொதுத்துறை நிறு வனங்களில் நவரத்தினங்களில் ஒன்றாக இருக்கிறது. இதுமட்டுமல்ல ஏராளமான பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்க காரணமாக இருந்தவர் ராமமூர்த்தி.

தியாகங்களை தலைவர்கள் மட்டுமல்ல.  அவர்களது குடும்பத்தினரும் செய்துள்ள னர். இவர்கள் சாதாரண மக்களுக்காக தன்  வாழ்க்கையை அர்ப்பணித்தவர்கள். இது போல தோழர் என்.சங்கரய்யா, வி.பி.சிந்தன்   போன்றவர்கள் எல்லாருக்கும் வீடு, கல்வி, வேலை, மருத்துவம் கிடைக்க வேண்டும். சோசலிச, மதச்சார்பற்ற சமூகம் இருக்க வேண்டும் என்பதற்காக போராடியவர்கள். வாழ்க்கையை அர்ப்பணித்தவர்கள். இன் றைக்கு எல்லாவற்றிற்கும் ஒரு அச்சுறுத்தல் வந்திருக்கிறது.  ஒரு வலதுசாரி அரசாங்கம், பாசிஸ்ட் அர சாங்கம் நமது சொத்துக்களை சுரண்டிக்கொ ழுக்கிறது. 10 ஆயிரம் கடன் வாங்கினால் அவன் சொத்துகளை ஏலம் விடுகிறான். 10  ஆயிரம் கோடி கடன் வாங்கினால் தள்ளுபடி  ஆகிறது. ஆங்கிலேயர் காலத்தில் அரிசி,  கோதுமைக்கு வரி போட்டனர். அதற்குப்  பிறகு மோடி ஆட்சியில்தான் உணவுபொருள் களுக்கு ஜிஎஸ்டி 5 விழுக்காடு வரி போட்டுள் ளனர். 64 விழுக்காடு வரியினை கீழே இருக் கிற சாதாரண மக்கள் செலுத்துகின்றனர். அன் றாடம் செலுத்துகிறோம். ஆனால் வருமான  வரி செலுத்துபவர் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குப் பிறகுதான் செலுத்துவார். இப் படி ஏழைகளுக்கு எதிரான ஒரு அரசாங்கம் இருக்கிறது. இது மாற்றப்பட வேண்டும். இவற்றிற்கு எதிராக ஒன்றுபட்டு போராட வேண்டும். சாதியாகவும், மதமாக, இனமாக  பிரிக்கும் வேலையை சதாசர்வ காலமும் பாஜக செய்து கொண்டுள்ளது. இந்த முயற்சி யில் நீதிமன்றம்,  சிபிஐ, அமலாக்கத்துறை, வருமானவரித்துறை போன்றவற்றை அடியா ளாகப் பயன்படுத்துகிறது.  என்றைக்காவது இந்தியாவிற்கு விடி வுகாலம் வரும் என்றால் அது கம்யூனிஸ்ட்  கட்சியினால்தான். நாம் செய்யவில்லை என் றால் நம் குழந்தைகள், பேரப்பிள்கைள் செய்ய வேண்டும். நாம் ஒழுங்காக செய்ய வில்லை என்றால், அதற்கான தண்டனை களை நம் பிள்ளைகளும், பேரப்பிள்ளைக ளும் அனுபவிப்பார்கள். நம்முடைய நேற் றைய சந்ததி போராடியதால் அரசியல்  சுதந்திரம் பெற்றோம். நாம் இன்றைக்கு  போராடவில்லை என்றால் நமது பொருளா தார சுதந்திரமும், இந்தியாவின் மதச் சார்பற்ற தன்மையும் பாதுகாப்பில்லாமல் போகும். மீண்டும் பரமபதத்தைப் போல  பூச்சியத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டி இருக்கும். எனவே, ராமமூர்த்தி, சங்க ரய்யா, வி.பி.சிந்தனைப்போல நம்மை அர்ப் பணித்துக் கொள்ள வேண்டும் என்றார்.