சேலம், ஜூன் 2- சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகு திகளில் சூறைக்காற்றுடன் பெய்த கன ழையால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சேலம் மாவட்டம், ஆத்தூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு வார மாக கடும் வெயில் கொளுத்தி வந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக் குள்ளாகினர். மேலும், விவசாயிகள் கடந்த வாரம் பெய்த மழையில் உழவு செய்து அடுத்த கட்டத்திற்கு செல்லும் வேலையில், கடும் வெயிலால் செய்வத றியாது இருந்தனர். இந்நிலையில், சனி யன்று மதியம் சேலம் மாவட்டத்தில் பர வலாக இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. மழையால் ஆத்தூர் கொத் தாம்பாடி மாரியம்மன் ஆலயம் அருகே இருந்த சுமார் 80 ஆண்டு பழமை வாய்ந்த மரம் வேரோடு சாய்ந்தது. மரம் அருகில் இருந்து ஓட்டு வீடு, தேர் கூரை, மின்கம்பம் சேதமடைந்தன. நரசிங்கபுரம் நகராட்சி அலுவலகம் அருகே அமைந்துள்ள சந்தைப்பேட் டையில் மழைநீர் குளம்போல தேங்கிய தால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதேபோன்று, இளம்பிள்ளை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் பெய்த மழையால் சாலைகளில் மரங்கள் முறிந்து விழந்தன. இளம்பிள்ளை சந் தைப்பேட்டை பகுதியில் மழைநீர் வெளியே செல்ல முடியாமல் சாலை யில் தேங்கியிருந்தன. இதனால் இருச் சக்கர வாகனத்தில் செல்பவர்களும், பாத சாரிகளும் மிகவும் சிரமப்பட்டு வந்த னர். எடப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டா ரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக, பகல் நேரங்களில் வெப்ப அலை வீசி வந்த நிலையில், சனியன்று பெய்த மழையால் பொதுமக்கள் உற்சாகம டைந்தனர். கொங்கணாபுரத்தை அடுத்த குமரன் நகர் பகுதியில், சங்க கிரி - ஓமலூர் பிரதான சாலையின் குறுக்கே மரம் முறிந்து விழுந்ததால், அப்பகுதியில் நீண்ட நேரம் போக்குவ ரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து அப்பகுதிக்கு விரைந்து வந்த நெடுஞ்சாலைத்துறையினர், மரத்தை அங்கிருந்து அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனம ழையால் சாலைகளில் மழைநீர் தேங்கி நின்றது.