districts

சேலத்தில் கனமழை: வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தரைப்பாலங்கள்

சேலம், அக்.18- சேலம் மாவட்டத்தில் பெய்து வரும்  கனமழையால் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் 3 தரைப் பாலங்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டதால், அப்பகுதி பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக் கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட் களாக பலத்த மழை பெய்து வருகிறது.  இரவு நேரங்களில் கொட்டித்தீர்க்கும் கனமழையால் ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்தது. மேலும், தடுப்பணைகள் நிரம்பி வருகின்றன. இந்நிலையில், ஞாயிறன்று இரவு பலத்த மழையால் ஆத்தூர் பகுதியில் ஓடும் வசிஷ்ட நதி யில் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடியது.  18 ஆண்டுகளுக்கு பிறகு வசிஷ்ட நதியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியதை  பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து பார்த்து சென்றனர். இருப்பினும், ஆத்தூர் நரசிங்கபுரம், விநாயகபுரம், அணைமேடு பகுதிகளில் தண்ணீர் கரை புரண்டு ஓடியது. இதனால் அணை மேடு என்.வி.என்.நகர் பகுதியில் வசிக் கும் பகுதிக்குள் தண்ணீர் புகுந்தது.  மேலும் கோட்டை தரைப்பாலம்  தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது.  அங்கு புதிய பாலம் கட்டப்பட்டு வரும்  நிலையில், ஏற்கனவே இருந்த தரைப் பாலம் அடித்துச்செல்லப்பட்டதால் துலுக்கனூர், கல்லாநத்தம், அம்மம் பாளையம், முல்லைவாடி, உப்பு ஓடை,  வடக்குகாடு, சந்தனகிரி ஆகிய கிரா மங்களுக்கு செல்லும் பாதை துண்டிக் கப்பட்டுள்ளது. இதனால், அங்கு  வசிக்கும் மக்கள் பெரும் அவதிக்குள் ளாகினர். 

தலைவாசல் வழியாக ஓடும் வசிஷ்ட  நதி வீரகனூர் வழியே செல்லும் சுவேத  நதியிலும் வெள்ளப்பெருக்கு ஏற் பட்டது. இதனால் வீரகனூர் பேரூராட்சி,  2 ஆவது வார்டுக்குட்பட்ட காமாட்சி அம்மன் கோவில் காலனி பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு தண்ணீர்  புகுந்தது. இதனால் சுமார் 100 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பருத்தி பயிர்கள் சேதமடைந்தன. மேலும், முட்டல் நீர் வீழ்ச்சி, சிறுவாச்சூர் அருகே வடக்கு  கல்ராயன் மலையில் உள்ள தேன்பாடி  நீர்வீழ்ச்சி ஆகியவற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதேபோல சரபங்கா நதியிலும்  வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் தேவூர் அருகே ஆத்துகாடு  பகுதியில் உள்ள தரைப்பாலம், செட்டி பட்டி வயக்காடு தரைப்பாலம் ஆகிய வை தண்ணீரில் அடித்துச் செல்லப் பட்டன. மேலும், அம்மன் கோவில் பாலம், செட்டிபட்டி ஓங்காளியம்மன்  கோவில் தரைப்பாலம், தைலாங்காடு தரை பாலம் உள்ளிட்ட 3 தரை பாலங் கள் தண்ணீரில் மூழ்கின. இதன் காரண மாக சுற்றுவட்டார கிராமங்களுக்கு  போக்குவரத்து துண்டிக்கப்பட் டுள்ளது.

சரபங்கா நதியின் கரையோரம்  உள்ள 200 ஏக்கர் பரப்பளவில் பயிரி டப்பட்டிருந்த நெல், கரும்பு, பருத்தி, மஞ்சள், வாழை உள்பட பயிர்களை  தண்ணீர் சூழ்ந்தது. ஆற்று வெள்ளத் தால் பாதிக்கப்பட்ட இடங்களை  பேரூராட்சிகளின் உதவி இயக்குனர்  கணேஷ் ராம், உதவி செயற்பொறி யாளர் சுப்பிரமணி, பேரூராட்சி தலைவர்  காவேரி உள்பட அதிகாரிகள் பார்வை யிட்டு, ஆய்வு செய்தனர். ஓமலூரை அடுத்த பாகல்பட்டியில் சென்றாய பெருமாள் கோவில் தெப்பக் குளம் நிரம்பி வழிந்தது. இதனால் அங்குள்ள வீரமாத்தி அம்மன் கோவிலை தண்ணீர் சூழ்ந்தது. மேலும் அங்குள்ள ஜெய் நகர் பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்குள் தண்ணீர்  புகுந்ததால் மக்கள் வீட்டை விட்டு வெளி யே வர முடியாமல் சிரமப்பட்டனர்.  இந்நிலையில், மகுடஞ்சாவடி சுற்று வட்டார பகுதிகளில் பெய்த மழையால்  ஆங்காங்கே தாழ்வான பகுதிகளில்  மழை நீர் தேங்கி நின்றது. மேலும்,  கவுண்டனேரி கஸ்பாபட்டி, ஏரி நம்பி யாம்பட்டி, ஏரி ஆகிய ஏரிகளில் நீர் முழு  கொள்ளளவு எட்டின. தொடர் மழையி னால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

;