districts

img

சுகாதாரமற்ற உணவு பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை

சேலம், மே 8- சுகாதாரமற்ற உணவு பொருட்களை விற்பனை செய்வது தெரிய வந்தால் கடுமை யான நடவடிக்கை எடுக்கப்படும் என சுகா தாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார். சேலம் மாவட்டம், அஸ்தம்பட்டி அருகே உள்ள சிஎஸ்ஐ பாலிடெக்னிக் கல்லூரியில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில்,  சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணி யன் கலந்து கொண்டு முகாமை தொடங்கி  வைத்து, தடுப்பூசி செலுத்தும் பணியை ஆய்வு செய்தார். இதன்பின், செய்தியா ளர்களிடம் அவர் கூறியதாவது, இந்தியாவி லேயே தமிழகத்தில் மட்டும்தான் மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகள் சிறப்பாக உள் ளது. கொரோனாவை கட்டுப்படுத்தும்  வகை யில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 18 வய துக்கு மேற்பட்டவர்கள் 92.89 சதவிகிதம் பேர் முதல் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இரண்டாவது தவணையாக 79.39 சத விகிதம் பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இன்னும் தோராயமாக இரண்டு கோடி மக்கள் இரண்டாம் கட்ட தடுப்பூசி போடாமல் இருப்பதால் அவர்களுக்கு இன்றைய தினம் (ஞாயிறன்று) நடைபெறும் சிறப்பு முகாமில்  தடுப்பூசி போட இலக்கு நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது. 

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் அரசு மருத்துவமனையில் போதுமான கட்ட மைப்பு வசதிகள் இல்லாமல் இருப்பதாக கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக ஏற்கனவே மக்கள் பிரதிநிதி கள், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில் அங்கு 1.5 கோடி மதிப்பீட்டில் விரைவில் பிரேத பரிசோதனை கூடம் கட்டப்படும் என  தெரிவித்தார். மேலும், தமிழகம் முழுவதும்  708 புதிய நகர்ப்புற மருத்துவ நிலையங்கள் ஏற்படுத்தப்படும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி, சேலம் மாவட்டத்தில் 38 நகர்புற சுகாதார மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாநகராட் சியில் 32 இடமும், நகராட்சி பகுதியில் 6 இடங் களிலும் அமைக்கப்படும், என்றார்.  மேலும், சமீபத்தில் கேரளா மாநிலத்தில் ஷவர்மா சாப்பிட்ட மாணவி உயிரிழந்துள் ளார். இதன் தொடர்ச்சியாக தமிழகம் முழுவ தும் ஷவர்மா விற்பனை செய்யப்படும் உண வகங்களில் ஆய்வு மேற்கொள்ள நடவ டிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஷவர்மா விற் பனை செய்யப்படும் கடைகளில் தரமான தாக உள்ளதா? அங்கு இறைச்சிகள் பதப்ப டுத்தும் வசதிகள் இருக்கிறதா? என்பது குறித்து தமிழகம் முழுவதும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த ஆய் வின் அடிப்படையில் சுகாதாரமற்ற உணவு பொருட்களை விற்பனை செய்வது தெரிய வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத் துள்ளார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், கொரோனா சிறப்பு பணியில் வேலை இழந்த வர்களுக்கு மீண்டும் வேலைவாய்ப்புகள் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப் படும். தற்போது 708 நகர்புற சுகாதார மையம்  ஏற்படுத்தப்பட உள்ளது. அங்கு மருத்து வர்கள், செவிலியர்கள், உதவியாளர்கள் தேவைப்படுவதால் ஏற்கனவே பணி புரிந்த வர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். புதியதாக 2004 செவிலியர்கள் பணி அமர்த் தப்பட உள்ளனர். இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். முன்னதாக, இந்நிகழ்ச்சியில் சுகா தாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம் உட்பட அரசுத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.