சேலம், டிச.18- ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரி யரை இடமாற்றம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சேலம் மாநகரம், செட்டிசாவடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். மூன்று பெண் ஆசிரியர்கள், ஒரு தலைமை ஆசிரியர் பணியாற்றி வரு கின்றனர். இந்நிலையில் பள்ளி தலைமை ஆசிரியர் அந் தோணி என்பவர், ஏற்காடு புலியூர் தொடக்கப் பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றி வந்தவர், கடந்த ஜூலை 5 ஆம் தேதியன்று செட்டிச்சாவடி ஊராட்சி ஒன் றிய தொடக்கப்பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டு பணி யாற்றி வந்தார். இந்நிலையில், அவர் கொண்டப்ப நாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் சத்திய வாணி தலைமையில், பள்ளி குழந்தையின் பெற் றோர்கள் செட்டிச்சாவடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி நுழைவாயில் முன்பு புதனன்று சாலை மறிய லில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கன்னங்குறிச்சி காவல் துறையினர், வட்டார கல்வி அலு வலர் தங்கதுரை ஆகியோர் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். அப்போது, இது சம் பந்தமாக மாவட்ட கல்வி அலுவலரிடம் தகவல் தெரி வித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என உறுதிய ளித்தனர். அதன்பேரில் அனைவரும் கலைந்து சென்ற னர்.