districts

img

சர்க்கரைவள்ளி கிழங்கு அறுவடை துவங்கியது

தருமபுரி, மார்ச் 27- தருமபுரி அருகே உள்ள காரிமங்கலம் பகுதியில் சாகுபடி  செய்யப்பட்ட சர்க்கரைவள்ளி கிழங்கு அறுவடை துவங்கியது. நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் கடந்த வருடம் நல்ல பருவமழை பெய்தது.  குறிப்பாக தருமபுரி மாவட்டத்தில் பருவமழையால் நிலத்தடி  நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால், மாவட்டத்தில் மானவரி  பயிர்கள் சாகுபடி அதிகரித்தது. இதில் காரிமங்கலம் ஒன்றியத் திற்குட்பட்ட பகுதிகளான  குட்டப்பட்டி, மன்னாடிப்பட்டி, முருக்கம்பட்டி ,நாகணம் பட்டி, முல்லனூர் உட்பட 10க்கும்  மேற்பட்ட கிராம பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட ஏக்கரில்  சர்க்கரைவள்ளி கிழங்கு அதிகளவு சாகுபடி செய்யப்பட்டது.  ஐப்பசி, கார்த்திகை, மார்கழி ஆகிய மாதங்களில் சர்க்கரை வள்ளி கிழங்கு பயிரிடப்படுகிறது. பின்னர் தை, மாசி,  பங்குனி ஆகிய மூன்று மாதங்களில் அறுவடை செய்யப்படு கிறது. மூன்று மாத குறுகிய கால சாகுபடி பயிர் என்பதா லும், பூச்சி தாக்குதல் குறைவாகவும், மகசூல் அதிகளவு கிடைப்பதாலும் ஏக்கருக்கு ரூ.75 ஆயிரம் முதல் ரூ.80  ஆயிரம் வரை லாபம் கிடைப்பதாலும், சாகுபடி செய்யப்படு வதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இங்கு விளையும் சிவப்பு நிற சர்க்கரைவள்ளி கிழங்கு தருமபுரி மாவட்டம் மற்றும் திருச்சி, சேலம், ஈரோடு, கோவை,  சென்னை மற்றும் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடக  உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், காரிமங்கலம் ஒன்றி யத்திற்குட்பட்ட பகுதியில் சர்க்கரைவள்ளி கிழங்கு 200க்கும்  மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். குறுகிய கால பயிர் என்பதாலும், குறைந்த செலவில் நல்ல  மகசூல் கிடைப்பதாலும் தொடர்ந்து சர்க்கரைவள்ளி கிழங்கை பயிரிட்டு வருகிறோம். ஒரு கிலோ சர்க்கரை வள்ளி கிழங்கு 10 ரூபாய்க்கு விற்பனை செய்தாலும் நல்ல  லாபம் கிடைக்கிறது. ஒரு ஏக்கருக்கு ரூ.80 ஆயிரம் வரை லாபம் கிடைக்கிறது. கூலி ஆட்களுக்கு வெட்டுக்கூலி கொடுத்தால், சற்று லாபம் குறைய வாய்ப்புள்ளது. விவசாயிகளாகிய எங்களால் ஏற்றுமதி செய்ய முடிவ தில்லை. இதனால் வியாபாரிகள் எங்களிடம் கிலோ 10 ரூபாய்க்கு கொள்முதல் செய்து, வெளி மாவட்டங்கள் மற்றும்  வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். உழவர் சந்தை, தினசரி சந்தைகளில் கிலோ 25 ரூபாய் வரை விற்பனை  செய்யப்படுகிறது, என்றனர்.