திருட்டுப்போன செல்பேசிகள் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு
திருட்டுப்போன செல்பேசிகள் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு உதகை, ஜூலை 21- நீலகிரி மாவட்டத்தில் திருடுபோன ரூ.10 லட்சம் மதிப் புள்ள 53 ஸ்மார்ட் செல்போன்கள் மீட்கப்பட்டு உரிமையா ளர்களுக்கு ஒப்படைக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் காணாமல் மற்றும் திருட்டு போய் மீட்கப்பட்ட செல்போன்களை உரிமையாளர்க ளிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி சனியன்று உதகை மேற்கு காவல் நிலையத்தில் நடைபெற்றது. இதில், காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் கலந்து கொண்டு உரிமையாளர்களிடம் செல்போன்களை வழங்கினார். இதன்படி, ரூ.10 லட்சம் மதிப்புள்ள 53 ஸ்மார்ட் செல்போன்கள் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட் டது. இதனைத்தொடர்ந்து, காவல் கண்காணிப்பாளர் செய்தியாளர்களிடம் கூறுகையில், காணாமல் போன 50 க்கும் மேற்பட்டோரின் செல்போன்கள் மீட்டு கொடுக் கப்பட்டுள்ளது. இதில், வெளி மாநிலங்களை சேர்ந்த உரிமையாளர்களும் உள்ளனர். நீலகிரி குற்றப்பிரிவு மற்றும் உள்ளூர் போலீசார் இணைந்து செயல்பட்ட தன் மூலம் கடந்த இரண்டு வருடங்களில் 175 செல்போன் கள் மீட்கப்பட்டு உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் இதுவரை ரூ. 2 கோடியே 50 லட் சம் பணம் மீட்கப்பட்டு உள்ளது. வழக்கில் சிக்கிய ரெண்டு குற்றவாளிகளை ராஜஸ்தான் மாநிலம் சென்று நீலகிரி போலீசார் கைது செய்து அழைத்து வந்தனர். நீலகிரி மாவட்டம் சுற்றுலாப் பிரதேசம் என்பதால் பேருந்து நிலையம் உள்ளிட்ட பல இடங்களுக்கு சுற்று லாப் பயணிகள் செல்லும்போது செல்போன்கள் திருடப் படுகிறது. இதைத் தொடர்ந்து அவர்கள் புகார் அளித்து விட்டு சொந்த ஊருக்கு சென்று விடுகின்றனர். எனவே, அவர்கள் அளித்த புகாரின் பேரில் சிஎஸ்ஆர் பதிவு செய்து மத்திய அரசின் சிஇஐஆர் போர்டலில் பதிவு செய்து செல்போன்கள் மீட்கப்பட்டு உரிமையாளர் களிடம் வழங்கப்படுகிறது. பழைய மொபைல்களை கடைகளில் வாங்கும் போது பில் இல்லாமல் வாங்க கூடாது, என்றார். இதில், உதகை ஊரக காவல் துணை கண்காணிப் பாளர் விஜயலட்சுமி, சைபர் கிரைம் ஆய்வாளர் லட்சு மண தாஸ், உதவி ஆய்வாளர்கள் கலைவாணி, நிஷாந்தி, கார்த்திக், ஜெயசூர்யா, பார்த்திபன் உள்பட பலர் இருந்தனர்.
இருசக்கர வாகனத்தில் 5 பேர் பயணம் போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை
இருசக்கர வாகனத்தில் 5 பேர் பயணம் போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை நாமக்கல், ஜூலை 21- பள்ளிபாளையம் அருகே இருசக்கர வாகனத்தில் 15 வயது சிறுவன், அவருடன் 3 வயது சிறுமி மற்றும் 2 சிறுவர்கள் என மொத்தம் 5 நபர்கள் பயணித்ததை கண்டு போக்குவரத்து காவல் துறையினர் அதிர்ச்சிய டைந்தனர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தில் போக்கு வரத்து காவல் துறையினர் மற்றும் காவல் துறையினர், சனியன்று வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது இரு சக்கரம் வாகனம் ஒன்றில் சுமார் 15 வயது மதிக்கத்தக்க பள்ளி மாணவன் ஒருவர், 3 வயது சிறுமி, 2 சிறுவர்கள் என மொத்தமாக ஐந்து பேர் பயணம் செய்தபடி பிரதான சாலையை கடக்க முயன்றனர். இதனை கண்ட போக்குவரத்து காவல் துறையினர் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து இருசக்கர வாக னத்தை ஓட்டி வந்த சிறுவனை தடுத்து நிறுத்திய போக்கு வரத்து காவல் துறையினர் அந்த சிறுவனிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில், தனது தங்கை மற்றும் வீட்டின் அருகே உள்ள நண்பர்களை அழைத்துக் கொண்டு கடை வீதி வரை அப்பாவின் இரு சக்கர வாகனத்தை எடுத்து வந்ததாக கூறியுள்ளார். தொடர்ந்து சிறுவனிடம் அவரு டைய தந்தையின் செல்போன் எண்ணை கேட்டு பெற்ற போலீசார், இதுபோல சட்ட விதிகளை மீறி சிறுவர்களி டம் இருசக்கர வாகனத்தை ஓட்டுவதற்கு அனுமதிப்பது தவறான ஒன்றாகும். அதேபோல சிறுவர்கள் இருசக்கர வாகனத்தை ஓட்டி விபத்து ஏற்படுத்தினால், சம்பந்தப் பட்ட பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, மீண்டும் இதுபோல் வாகனத்தை கொடுத்து அனுப்பக்கூ டாது என கடுமையாக எச்சரித்தனர். மேலும், இருசக் கர வாகனத்தை ஓட்டி வந்த சிறுவனுக்கும் உரிய அறி வுரைகளை வழங்கி அனுப்பி வைத்தனர். பள்ளிபாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிகக் குறைந்த வயதில், இருசக்கர வாகனத்தை ஓட்டும் பள்ளி சிறுவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், போக் குவரத்து போலீசார் கண்காணிப்புப் பணிகளை மேற் கொள்ள வேண்டும். மேலும், அரசு பள்ளிகளில் சாலை விதிகளை மீறி வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் பாதிப்பு கள் உள்ளிட்டவற்றை எடுத்துக் கூறும் வகையில் விழிப் புணர்வு நிகழ்வுகளை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குழப்பம் ஏற்படுத்தும் பேருந்து எண்கள்
குழப்பம் ஏற்படுத்தும் பேருந்து எண்கள் நாமக்கல், ஜூலை 21- குமாரபாளையத்தில் குழப்பம் ஏற்படுத்தும் பேருந்து எண்களால் பயணிகள் அவதி அடைந்து வரு கின்றனர். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் இருந்து ஈரோடு இடைப்பாடி செல்லும் இரண்டு பேருந்துகளும் கே 1 என குறிப்பிடப்பட்டுள்ளதால் பயணிகள் குழப்பம டைந்து வருகிறார்கள். குமாரபாளையம் பேருந்து நிலையத்திலிருந்து ஈரோடு,சேலம், திருச்செங்கோடு, பவானி ,சங்ககிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் சென்று வருகிறது. குமாரபாளையம் பேருந்து நிலையத்தில் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் நடை பெற்று வருகிறது. இந்நிலையில் குமாரபாளையத்தில் இருந்து இடைப்பாடி செல்லும் நகரப் பேருந்து எண் ணும் குமாரபாளையத்திலிருந்து ஈரோடு செல்லும் நக ரப் பேருந்து எண்ணும் கே 1 என ஒரே மாதிரியாக இருப்பதால் ஒரே இடத்தில் இரண்டு பேருந்துகளும் நிற் கும் பொழுது, பயணிகள் குழப்பம் அடைந்து வரு கின்றனர். இதன் காரணமாக படிப்பறிவு இல்லாத ஏழை எளிய மக்கள்,தொழிலாளர்கள் குழப்பம் அடைந்து பேருந்துகளில் மாறி ஏறி விடுவதால், தேவையற்ற நேர விரையும் அலைச்சல் ஏற்பட்டு வருகிறது. எனவே இரண் டில் ஏதேனும் ஒரு அரசு பேருந்து எண்ணை மாற்றி அமைத்து பயணிகளின் குழப்பத்தை தீர்க்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வ லர்கள் கோரிக்கையாக உள்ளது.
வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வாலிபர்கள்
உதகை, ஜூலை 21- பொன்னானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால், அங்கு குளிக்க சென்ற 2 பேர் உயிரிழந்தனர். நீலகிரி மாவட்டம், பந்தலூர் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக, தென்மேற்கு பருவமழை தொடர்ச்சியாக பெய்து வருகிறது. இதனால், பொன்னானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன், ஆற்றின் கரையோரங்கள் அடிக்கடி ஆற்று வெள்ளம் சூழ்ந்து காணப் படுகிறது. இந்நிலையில், சனியன்று மதியம் பிதர்காடு சந்தக்குன்னு என்ற இடத்தைச் சேர்ந்த குமார் என்பவரின் மகன் குணசேக ரன் (18) மற்றும் பதினெட்டுகுன்னு என்ற இடத்தைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவரின் மகன் கவியரசன் (17) என இருவரும் பாலாவயல் என்ற இடத்தில், ஆற்றில் குளிக்க சென்று உள்ள னர். ஆற்றில் வெள்ளம் நிறைந்து காணப்படும் நிலையில், ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இருவரும் பரிதா பமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தீயணைப்பு துறை மற்றும் பேரிடர் மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. கரையோரம் ஒதுங்கிய குணசேகரன் உடல் மீட்க்கப் பட்டு பந்தலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப் பட்டது. மேலும், ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப் பட்ட கவியரசன் உடலை தேடும் பணியில் தீயணைப்பு துறை யினர் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டு உள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதியை நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, பந்தலூர் தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி தலைமை யிலான அதிகாரிகள் குழுவினர் மற்றும் போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
மின் கட்டண உயர்வை திரும்பப்பெற முதல்வருக்கு சுப்பராயன் எம்.பி. கடிதம்
மின் கட்டண உயர்வை திரும்பப்பெற முதல்வருக்கு சுப்பராயன் எம்.பி. கடிதம் திருப்பூர், ஜூலை 21- சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கும், பொதுமக்களுக் கும் கடும் சுமையை ஏற்படுத்தியுள்ள மின் கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும் என தமிழக முதல்வருக்கு திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன் கடிதம் எழுதியுள் ளார். ஒன்றிய அரசு இயற்றியுள்ள கொள்கைகளால் இந்த மின் கட்டண உயர்வை ஏற்றும் நிலை ஏற்பட்டிருந்தாலும், இங் குள்ள தொழில்கள் கடும் நெருக்கடியில் இருக்கின்றன. இத னால் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பெரும் வேலை யிழப்பு ஏற்படும் ஆபத்து ஏற்படும். பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி மற்றும் ஒன்றிய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கை களால் தள்ளாடிவரும் இத்தொழில்கள் மீது மின் கட்டண சுமை நெருக்கடியை ஆழப்படுத்தியுள்ளது. எனவே, மின் கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும் என்று அந்த கடிதத்தில் கே.சுப்பராயன் எம்.பி. கூறியுள்ளார்.
மலைக்கிராமத்திற்கு 4 ஆண்டுகளுக்குப் பிறகு பேருந்து சேவை
மலைக்கிராமத்திற்கு 4 ஆண்டுகளுக்குப் பிறகு பேருந்து சேவை ஈரோடு, ஜூலை 21- அந்தியூர் அருகே உள்ள மலைக்கிராமத்திற்கு 4 ஆண்டுக ளுக்குப் பிறகு மீண்டும் அரசு பேருந்து சேவை தொடங்கி யது. ஈரோடு மாவட்டம், அந்தியூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட் பட்ட காக்காயனூர் மலைக்கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். வனப்பகுதியில் உள்ள பாலம் சேதமடைந்ததாலும், கொரோனா பாதிப்பாலும் இப்பகுதிக்கு இயக்கப்பட்டு வந்த அரசு பேருந்து கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. பாலத்தை சீரமைத்து மீண்டும் பேருந்து இயக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் விடுத்த கோரிக்கையையேற்று, பாலம் சீரமைக்க நடவ டிக்கை எடுக்கப்பட்டது. அதற்கான பணிகள் நிறைவடைந்த நிலையில், காக்காயனூர் மலைக்கிராமத்துக்கு 4 ஆண்டுக ளுக்குப் பிறகு அரசு பேருந்து சேவை சனிக்கிழமை முதல் தொடங்கியது. அந்தியூர் பேருந்து நிலையத்தில் இருந்து இக்கிராமத்துக்கு காலை, மாலை வேளைகளில் இப்பேருந்து இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இந்நிகழ்ச்சியில் அந்தியூர் சட்டமன்ற உறுப்பி னர் ஏ.ஜி.வெங்கடாசலம். அரசு போக்குவரத்துக் கழக கிளை மேலாளர் ரமேஷ், அந்தியூர் வனச்சரக அலுவலர் முருகேசன், ஊராட்சித் தலைவர்கள் குருசாமி, சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்..
ஊராட்சிகளை புதிதாக உருவாக்க வலியுறுத்தல்
ஊராட்சிகளை புதிதாக உருவாக்க வலியுறுத்தல் தருமபுரி, ஜூலை 21- தருமபுரியில் 4 ஊராட்சி ஒன்றியங்கள், 128 கிராம ஊராட்சி களை உருவாக்க வேண்டும் என ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் தருமபுரி மாவட்ட செயற்குழு கூட்டம், தருமபுரி ஆர்டி நகரில் சனியன்று, மாவட்டத் தலைவர் முகமது இலியாஸ் தலைமை யில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் தர்மன், பொருளாளர் வினோத்குமார் ஆகியோர் அறிக்கை களை முன்வைத்தனர். மாநில துணைத்தலைவர் ஆறுமுகம் சிறப்புறையாற்றினார். இக்கூட்டத்தில் மாவட்ட துணைத்த லைவர்கள் கிருஷ்ணமூர்த்தி, கோபிநாத், இணைச்செயலா ளர்கள் பூமாரி கண்ணன், சென்னப்பன், சுரேஷ், மாவட்ட தணிக்கையாளர் முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், மக்கள் தொகை அடிப்படையில் பூகோள ரீதியாக பெரிதாக உள்ள ஊராட்சி ஊராட்சி ஒன்றியங்களை பிரிக்க வேண்டும். அதன்படி, அரசு திட்டங்கள் கிராம மக்க ளுக்கு உடனடியாக சென்றடைய ஏதுவாக தருமபுரி மாவட்டத்தில் புதியதாக 4 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் 128 கிராம ஊராட்சிகளை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முடிவில், வட்டச் செயலா ளர் ரமேஷ் நன்றி கூறினார்.
ரேசன் கடையை சேதப்படுத்திய காட்டு யானை
ரேசன் கடையை சேதப்படுத்திய காட்டு யானை உதகை, ஜூலை 21- குன்னூர் அடுத்த கிரேக்மோர் எஸ்டேட் பகுதிக்குள் உலா வந்த காட்டு யானைகள் அங்குள்ள ரேசன் கடையில் உள்ள பொருட்களை சேதப்படுத்தியது. நீலகிரி மாவட்டம், குன்னூர் பகுதியில் காட்டு யானை கள் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அதை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து அடர்ந்த வனத் திற்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலை யில், கெத்தை பகுதியில் இருந்து காட்டு யானைகள் குன்னூரை அடுத்த கிரேக்மோர் எஸ்டேட் பகுதிக்குள் வந்து அங்குள்ள ரேசன் கடை மற்றும் மளிகை கடையை உடைத்து அங்கு உள்ள பொருட்களை சேதப்படுத்தியது. இதனைத்தொடர்ந்து வனச்சரகர்கள் மேற்பார்வையில் ஊழி யர்கள் தீப்பந்தங்களை ஏந்தி ஊருக்குள் நுழைந்த காட்டு யானைகளை வனத்துக்குள் விரட்டினர். மேலும் காட்டு யானைகள் மீண்டும் குடியிருப்பு பகுதிகளுக்கு வராத படி கண்காணிப்பு பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வரு கின்றனர்.