districts

img

அரிசிக்கும் ஜிஎஸ்டி: மோடி அரசின் கொடூர தாக்குதல்

கோவை, ஜூலை 29- அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட் கள் மீது ஒன்றிய மோடி அரசு ஜிஎஸ்டி வரி விதித்துள்ளது. மக்களின் குமுறல்களை வெளிப்படுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யினர் வெள்ளியன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மக்களின் அத்தியாவசிய உணவுப்பொருட் களான அரிசி, கோதுமை, பருப்பு, மாவு வகை கள், வெல்லம், தயிர், மோர் உள்ளிட்ட உணவு பொருட்கள் மீது ஒன்றிய பாஜக அரசு ஜிஎஸ்டி வரியை விதித்துள்ளது. மக்களின் மீது தொடுக்கப்பட்ட மோடி அரசின் இந்த கொடூர தாக்குதல்களை கண்டித்தும், உணவுப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பை ரத்து செய்ய வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியினர் வெள்ளியன்று தமிழ கம் தழுவிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  கோவை மாவட்டம், காந்தி பார்க் பகுதி யில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் கிழக்கு நகர செயலாளர் என்.செல்வராஜ் தலைமை தாங்கினார். இதில், சிபிஎம் கோவை மாவட்ட செயலாளர் சி.பத்மநாபன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ். கிருஷ்ணமூர்த்தி, கே.அஜய்குமார், கே. மனோகரன், யு.கே.சிவஞானம், வி.தெய் வேந்திரன் மற்றும் இடைக்குழு செயலா ளர்கள் ஆர்.சுந்தரம், பி.சி.முருகன், மணி உட் பட திரளானோர் கலந்து கொண்டனர்.

இதேபோன்று மார்க்சிஸ்ட் கட்சியின் மேட்டுப்பாளையம் தாலூகா குழு சார்பில் காரமடையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட னர். தாலுகா செயலாளர் காரை. கனகராஜ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் ஏ.ராதிகா பங்கேற்று கண்டன உரையாற்றினார். பொள்ளாச்சி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தாலுகா குழு உறுப்பினர் கே.ரவி தலைமை வகித்தார். இதில், மாவட்ட செயற்குழு உறுப் பினர் வி.ஆர்.பழனிச்சாமி, பொள்ளாச்சி தாலுகா செயலாளர் மூ.அன்பரசன், ஆனை மலை தாலுகா செயலாளர் வி.எஸ்.பரம சிவம், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஏ.துரைசாமி, மாவட்ட துணைச் செயலாளர் கே.மகாலிங்கம், தமிழக விவ சாயிகள் சங்க தாலுகா பொறுப்பாளர் ஸ்டா லின் பழனிச்சாமி, மலைவாழ் இளைஞர் சங்க  செயலாளர் சுரேஷ் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக, வாலிபர் சங்க தாலுகா தலைவர் ரமேஷ் கண்ணன் நன்றி கூறி னார்.

ஈரோடு

ஈரோடு மாவட்டம், சூரம்பட்டி நால்ரோட் டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் நகரக்குழு உறுப்பினர் எஸ்.ரவி தலைமை  வகித்தார். இதில், மாவட்ட செயலாளர் ஆர். ரகுராமன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கள் ஆர்.கோமதி, சி.பரமசிவம், எஸ்.சுப்ர மணியன், கே.ஆர்.விஜயராகவன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடி வில் நகரக்குழு உறுப்பினர் பொன்.பாரதி நன்றி கூறினார். சத்தியமங்கலம், வடக்குப்பேட்டை சந் தைக்கடை அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் பி.வாசுதேவன் தலைமை வகித்தார். இதில், தாலுகா செயலாளர் கே. எம்.விஜயகுமார் கண்டன உரையாற்றினர். இதேபோல் சத்தியமங்கலம், புது வடவள்ளி யில் செயலாளர் ஜே.மைக்கேல்ராஜ் தலை மையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெருந்துறை எல்ஐசி அலுவலகம் முன்பு  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தாலூகா  குழு உறுப்பினர் வி.ஏ.விஸ்வநாதன் தலைமை வகித்தார். இதில், மாவட்ட செயற்குழு உறுப் பினர் சி.பரமசிவம்,  தாலுகா செயலாளர் பி.முத்து பழனிசாமி, விவசாய சங்க தாலூகா தலைவர் கே.குப்புசாமி,  மாதர் சங்க தாலுகா  செயலாளர் பி.ஜெயக்கொடி, சிஜடியு எஸ். என்.மயில்சாமி ஆகியோர் கலந்து கொண்ட னர்.

நீலகிரி

நீலகிரி மாவட்டம், உதகை ப்ளூ மவுண் டன் தபால் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் உதகை தாலுகா செயலாளர் நவீன் சந்திரன் தலைமை வகித் தார். இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சங்கரலிங்கம், மாவட்டக்குழு உறுப்பினர் சுரேஷ், விவசாய சங்க செயலாளர் கிருஷ் ணன், மலைவாழ் மக்கள் சங்க மாவட்ட செய லாளர் அடையாள குட்டன் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக, தாலுகா குழு உறுப்பினர் ராஜரத்தினம் நன்றி கூறி னார்.

தருமபுரி

தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் நகர செயலாளர் ஆர்.ஜோதிபாசு தலைமை வகித்தார். இதில், மாவட்ட செயற்குழு உறுப் பினர் வே.விசுவநாதன், ஒன்றிய செயலாளர் என்.கந்தசாமி, மாவட்டக்குழு உறுப்பினர் கள் ஏ.ஜெயா, கே.பூபதி உட்பட பலர் கலந்து கொண்டனர். அரூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் பி.குமார் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஏ.குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சோ. அர்ச்சுணன், ஆர்.மல்லிகா உள்ளிட்ட திரளா னோர் பங்கேற்றனர்.  நல்லம்பள்ளி இந்தியன் வங்கி முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செய லாளர் எஸ்.எஸ்.சின்னராஜ் தலைமை வகித் தார். இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.முத்து, மாவட்டக்குழு உறுப்பினர்கள் கே.குப்புசாமி, கே.எல்லப்பன், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு முருகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில், மாவட்ட செயற்குழு உறுப்பி னர் சி.நாகராசன், மாவட்டக்குழு உறுப்பினர் டி.எஸ்.ராமச்சந்திரன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். காரிமங்கலம் இந்தியன் வங்கி முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செய லாளர் பி.ஜெயராமன் தலைமை வகித்தார். இதில், மாவட்டசெயற்குழு உறுப்பினர் எம். மாரிமுத்து மற்றும் மாதேஷ்வரன், முருகே சன் உள்ளிட்டோர் உரையாற்றினர். பாப்பி ரெட்டிப்பட்டி பேருந்து நிலையம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலா ளர் தனுசன் தலைமை வகித்தார். இதில், மாவட்ட செயலாளர் ஏ.குமார், மாவட்டக்குழு உறுப்பினர் சி.வஞ்சி மற்றும் டி.சேகர், கிருஷ் ணவேணி, தீர்த்தகிரி, மனோகரன் ஆகியோர் பேசினர்.

நாமக்கல்

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் கனரா  வங்கி முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் ராசிபுரம் வடக்கு ஒன்றிய செயலா ளர் கோ.செல்வராசு தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாவட்ட செயலா ளர் எஸ்.கந்தசாமி, ராசிபுரம் புதுச்சேத்திர பிர தேச குழு செயலாளர் எஸ்.பெரியசாமி ஆகி யோர் கண்டன உரையாற்றினார். இதில், மாவட்டக்குழு உறுப்பினர் பி.ராணி, நகரச் செயலாளர் சி.சண்முகம் உட்பட பலர் கலந்து கொண்டனர். எலச்சிபாளையம் பேருந்து நிறுத்தம் முன்பு சிபிஎம் மேற்கு ஒன்றிய செயலாளர் கே.எஸ்.வெங்கடாசலம் தலைமையில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட செயற் குழு உறுப்பினர் சு.சுரேஷ், மூத்த தலைவர் சுந் தரம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சேலம்

சேலம் மாவட்டம், பிஎஸ்என்எல் அலுவ லகம் முன்பு சிபிஎம் வடக்கு மாநகர செயலா ளர் என்.பிரவீன் குமார் தலைமையில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இதில், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம்.சேதுமாதவன், ஆர்.குழந்தைவேல் உட்பட பலர் கலந்து கொண்ட னர். சேலம் ஜங்சன் தலைமை தபால் அலுவ லகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மேற்கு மாநகர செயலாளர் எம்.கனகராஜ் தலைமை வகித்தார். இதில், மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் எம்.குணசேகரன், ஐ. ஞானசெளந்தரி உட்பட பலர் கலந்து கொண் டனர். மேச்சேரியில் தாலுகா செயலாளர் (பொ)  கே.மாது தலைமையில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்தில், மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ஏ.ராமமூர்த்தி, ஒன்றிய செயலாளர் ஜி. மணிமுத்து, பேரூராட்சி கவுன்சிலர் பழனி உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.

ஆத்தூர் பழைய பேருந்து நிலையம்  முன்பு தாலுகாக்குழு உறுப்பினர் எஸ்.பிரபு தலைமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.ராம மூர்த்தி, தாலுகா செயலாளர் ஏ.முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஓமலூர் பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தாலுகா செயலாளர் ஈஸ்வரன் தலைமை வகித்தார். இதில், மாவட்ட செயற்குழு உறுப் பினர் ஜி.கணபதி, தாலுகா குழு உறுப்பினர் கள், கிளை செயலாளர்கள் உள்ளிட்ட திரளா னோர் கலந்து கொண்டனர். மேட்டூர் அணை ஸ்டேட் பேங்க் முன்பு  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயற் குழு உறுப்பினர் ஆர்.வெங்கடபதி, மேட்டூர் கொளத்தூர் ஒன்றிய செயலாளர் எஸ்.வசந்தி  உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.