திருப்பூர், அக். 17 - திருப்பூர் மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகத்தில் திங்களன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற் றது. மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித் தொகை, புதிய குடும்ப அட்டை வேண்டி யும், சாலைவசதி குடிநீர் வசதி வேண்டியும் என பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 571 மனுக்களை பெற்றுக் கொண்டு அதன் மீது உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் அறிவுறுத்தினார். இந்நிகழ்ச்சியில் திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலர் த.ப.ஜெய்பீம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் அ.லட்சுமணன், துணை ஆட்சியர் சமூக பாதுகாப் புத்திட்டம் அம்பாயிரநாதன், துணை ஆட்சியர்கள் மற்றும் அனைத்து அரசுத் துறைகளின் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.