districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

லஞ்சம் பெறும் அரசு மருத்துவமனை பாதுகாவலர்: வீடியோ வைரல்

சேலம், ஆக.10- சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பாதுகாவலர்கள், நோயாளிக ளின் உறவினர்களிடம் லஞ்சம் பெறும் வீடியோ இணை யத்தில் வைரலாகி வருகிறது. சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மகப்பேறு மற்றும் குழந்தை கள் நல சிகிச்சை பிரிவில் நோயாளிகளின் உறவினர்களி டம் அங்கு பணியாற்றும் தனியார் பாதுகாவலர்கள் லஞ்சம் பெறும் வீடியோ வைரலாகி வருகிறது. மருத்து வமனையில் குழந்தைகள் அடிக்கடி கடத்தப்படுவதும், நோயாளிகளுக்கு போதிய பாதுகாப்பு இல்லாத சூழல்  குறித்து, வெள்ளியன்று உறவினர்கள் செய்தியாளர்களி டம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது இந்த  வீடியோ வெளியாகியுள்ளது. இதுகுறித்து மருத்துவ மனை அதிகாரிகள், காவல்துறையினர் உரிய விசா ரணை மேற்கொள்ள வேண்டும். மருத்துவமனை வளா கத்தில் அதிகளவில் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண் டும் என, நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கல்

சேலம், ஆக.10- அம்மாபேட்டையில் நடைபெற்ற கோவில் திருவிழா வில் மாணவ, மாணவிகளுக்கு உதவித்தொகை வழங் கப்பட்டது. சேலம் மாவட்டம், அம்மாபேட்டை செங்குந்தர் மாரி யம்மன் கோவில் ஆடிப்பெருவிழாவை முன்னிட்டு, ஓம் சக்தி நண்பர்கள் குழுவின் சார்பில் கலை நிகழ்ச்சிகள் வெள்ளியன்று நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் தேசிய சமூக இலக்கிய பேரவையின் மாநிலத் தலைவரும், சேலம் வரலாற்று சங்க தலைவருமான தாரை ஆர்.குமர வேலு, பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் உதவித் தொகைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சேலம் பொறியியல் கல்லூரி தலைவர் லோகநாதன், அறங் காவலர் நியமனக்குழு தலைவர் கே.ஆர்.முருகன், மாந கராட்சி எதிர்க்கட்சித் தலைவர் யாதவமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

தருமபுரி, ஆக.10- கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை சீரமைக்க வேண் டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தருமபுரி மாவட்டம், பழைய தருமபுரி அருகே சுமார் 220 ஏக்கர் பரப்பளவில் ராமாக்காள் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியில் தருமபுரி நகராட்சிக்குட்பட்ட வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் அனைத்தும் கலக்கும் வகையில் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் ஏரி எப்போதும் பாசம் படிந்தே காணப்ப டும். ஏரியில் கழிவுநீர் கலப்பதால் ஏரிக்கரையை ஒட்டிய படி உள்ள வீடுகளில் உள்ள ஆழ்துளை கிணறுகளில், கழிவுநீர் கலந்தே வருகிறது. இதனால் கழிவுநீர் கலக்கும் இடத்தில், ஏரிக்கரையில் ரூ.25 லட்சம் மதிப்பில் கடந்த 4  ஆண்டுகளுக்கு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக் கப்பட்டது. இந்த சுத்திகரிப்பு நிலையம் முறையாக பரா மரிக்கப்படாததால், கழிவுநீர் தொடர்ந்து ஏரியில் கலந்து வருகிறது. இதனால் ஏரி கடும் துர்நாற்றம் வீசுவதால், ஏரி யில் கலக்கும் கழிவுநீரை சுத்திகரிக்கும் நிலையத்தை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உடலுறுப்பு தானம் செய்த வாலிபருக்கு அரசு மரியாதை

சேலம், ஆக.10- உடலுறுப்பு தானம் செய்த சங்ககிரியைச் சேர்ந்த  வாலிபரின் உடலுக்கு அரசு அதிகாரிகள் மரியாதை செலுத்தினர். சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே உள்ள மோரூர்  மேற்கு கிராமம், வேங்கிபாளையம் சென்னாயக்கன் காடு பகுதியைச் சேர்ந்த நெசவு தொழிலாளி பழனி சாமி. இவரது மனைவி அனிதா. இத்தம்பதியின் மகன் கவின் (21), டெக்ஸ்டைல் டிப்ளமோ படித்துவிட்டு நாமக்கல் மாவட்டம், வெப்படை பகுதியில் உள்ள தனி யார் நூற்பாலையில் பணிபுரிந்து வந்தார். இந்நிலை யில் கவினுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு  ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று  வந்தார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த கவின்  மூளைச்சாவு அடைந்தார். அதனையடுத்து பெற்றோர் தனது மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்தனர். உடல் உறுப்பு தானம் செய்யப்பட்ட கவின் உடலானது சென்னாயக்கன்காடு பகுதியில் உள்ள மயானத்திற்கு வெள்ளியன்று கொண்டு செல்லப்பட்டது. அங்கு சங்க கிரி வட்டாட்சியர் வாசுகி தலைமையில் அரசு மரியாதை செலுத்தப்பட்டு, கவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.  அப்போது மோரூர் மேற்கு ஊராட்சி மன்றத் தலைவர்  கலாமோகன்ராஜ், வருவாய் ஆய்வாளர் மலர்விழி, கிராம நிர்வாக அலுவலர் முனியப்பன் உட்பட பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

தொடர் மின் நிறுத்தத்தால் அவதி

தொடர் மின் நிறுத்தத்தால் அவதி நாமக்கல், ஆக.10- குமாரபாளையம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் தொடர் மின் தடை ஏற்படுவதால் விசைத்தறி, கைத்தறி தொழில்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.  நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் மற்றும் சுற்றுப் புற பகுதியில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு, மாதாந் திர பராமரிப்பு பணிகள் செய்வதற்காக ,காலை முதல் மாலை  வரை மின்சார நிறுத்தம் செய்யப்பட்டு இருந்தது. இதன் காரண மாக விசைத்தறி, கைத்தறி, ஸ்பின்னிங்,  தொழில் பாதிப்புக் குள்ளாகியது. இந்நிலையில் இரண்டாம் நாளான வெள்ளி யன்றும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். மேலும், பல்வேறு தொழில் நிறு வனங்கள் பாதிப்புக்கு உள்ளானது. குழந்தைகள் பெற்றோர் என பல்வேறு தரப்பினர் அவதிக்குள்ளாகினர். முறையான நடவடிக்கைகளை மேற்கொண்டு, மின்சாரம் சீராக கிடைக் கும் வகையில் மின்வாரிய அதிகாரிகள் செயல்பட வேண்டும்  என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் இறுதிக் கட்டக் கலந்தாய்வு

திருப்பூர், ஆக. 10 - திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் 2024-2025  ஆம் கல்வி ஆண்டிற்கான இளநிலைபட்ட வகுப்புகளுக் கான இறுதிக்கட்டக் கலந்தாய்வு ஆகஸ்ட் 12 திங்கட்கிழமை  காலை 10.00 மணிக்கு கல்லூரி வளாகத்தில் நடைபெற உள் ளது. இந்த கல்லூரியில் கணிதப் பாடப்பிரிவில் 20 இடங்களும்,  இயற்பியல் பாடப்பிரிவில் 3 இடங்களும் மட்டுமே காலியாக  உள்ளன. ஏற்கெனவே விண்ணப்பித்து இடம் கிடைக்காதவர் களும், இதுவரை விண்ணப்பிக்காதவர்களும் கலந்தாய்வில்  பங்கேற்கலாம். கல்லூரிக்குச் செலுத்த வேண்டிய கட்டணத்  தொகையுடன் கலந்தாய்வில் பங்கேற்கலாம். அசல் சான்றி தழ்கள் இல்லாமல் இருப்பின் மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்க இயலாது என்று கல்லூரி முதல்வர் வ.கிருஷ்ணன்  கூறியுள்ளார்.

நிலக்கடலை, சோளப் பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

அவிநாசி, ஆக.10- அவிநாசி வட்டாரத்தில் நிலக்கடலை, சோளம் பயிரிட் டுள்ள விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய வேளாண்மை  துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர். வைகாசி பட்டத்தில், 10 ஆயிரத்துக்கும் அதிகமான ஏக் கர் பரப்பளவில்  நிலக்கடலையை மானாவாரி பயிராக விவ சாயிகள் பயிர் செய்து வருகின்றனர். இந்த நிலக்கடலை யில் இருந்து கிடைக்கும் வருமானத்தை உறுதிப்படுத்த  காப்பீடு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. நிலக்கடலை காப் பீடு செய்வதற்கு, ஒரு ஏக்கருக்கு ரூ.636 செலுத்த வேண் டும். இதில், நிலக்கடலையில் மகசூல் குறைந்தாலோ அல் லது பயிர் இழப்பு ஏற்பட்டாலோ, இழப்பீட்டு தொகையாக  ரூ.31,800 ஒரு ஏக்கருக்கு கிடைக்கிறது. இதேபோல  சோளம் பயிரிட்டுள்ள விவசாயிகள், காப்பீட்டுத் தொகை யாக, ஏக்கருக்கு ரூ.100  செலுத்த வேண்டும். இழப்பீட் டுத் தொகையாக ரூ.4978 கிடைக்கும்.  பயிர் காப்பீடு செய்ய  விவசாயின் ஆதார் அட்டை நகல், வங்கி பாஸ் புத்தகம் முன் பக்க நகல், சிட்டா, சோளம் அல்லது நிலக்கடலை விதைக் கப்பட்டது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலரிடமிருந்து  பெறப்பட்ட நடப்பு பசலி அடங்கல் ஆகியவற்றுடன் விண் ணப்பிக்க வேண்டும். அவிநாசி வட்டாரத்தில் சோளம் மற்றும் நிலக்கடலை  பயிருக்கு, நடப்பு பருவத்துக்கு (கரீப்பருவம்) இறுதி  நாளான ஆகஸ்ட் 30ஆம் தேதிக்குள் பயிர் காப்பீடு செய்து  கொள்ளலாம்.  இந்த ஆவணங்களுடன் அருகில் உள்ள  இசேவை மையம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங் கங்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளை தொடர்பு க ொள்ளலாம். மேலும் இது குறித்து விபரங்களுக்கு   வட்டார  அளவில் அவிநாசி வேளாண்மை உதவி இயக்குனர் அன்ப ழகி (9629015640), அவிநாசி வேளாண்மை அலுவலர்கள்  சத்யா (6379504990), சுஜி (9677962699) திருப்பூர் மாவட்ட  அளவில் வேளாண்மை அலுவலர் (பயிர் காப்பீடு) யுவராஜ்  (8072811388) ஆகியோரது எண்களில் தொடர்பு கொள்ள லாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திரா நகரில்  நாளை மின் தடை  

உடுமலை, ஆக.10 - இந்திரநகர் துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், 12 ஆம் தேதி திங்கட்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை ஏற்படும் என தெரிவிக் கப்பட்டுள்ளது. மின்தடை ஏற்படும் பகுதிகள்: உடுமலை மின்நகர்,  இந்திராநகர், சின்னப்பன்பு தூர், ராஜாவூர், ஆவல் குட்டை, சேரன்நகர், குமார மங்கலம், தாந்தோனி, வெங் கிட்டாபுரம், இராமேகவுண் டன்புதூர், துங்காவி, மெட் ராத்தி, போளரப்பட்டி மற்றும்  கே.கே. புதூர் ஆகிய பகுதி களில் மின்தடை ஏற்படும்  என்று உதவி செயற்பொறி யாளர் மூர்த்தி தெரிவித்து உள்ளார்.

கறிக்கோழி விலை 74 ரூபாயாக வீழ்ச்சி

திருப்பூர், அக.10- அண்டை மாநிலங்களில் மழை பெய்து  வருவதால் கறிக்கோழி விலை 74 ரூபாயாக  வீழ்ச்சி அடைந்துள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் சுற்றுவட் டாரப் பகுதிகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  கறிக்கோழி பண்ணைகள் உள்ளன. தினசரி  10 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப் பட்டு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்க ளுக்கும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள் ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும் அனுப்பி  வைக்கப்படுகிறது. கறிக்கோழி விற்பனை விலையை பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழுவினர் தினசரி நிர்ணயம்  செய்து அறிவிக்கின்றனர். இந்நிலையில் வட  மாநிலங்களில் சராவன் விரதம் தொடங்கி உள்ளது. மேலும், பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் கார ணமாக கறிக்கோழிகளை அனுப்ப முடியாத  சூழல் உள்ளதால், நுகர்வு குறைந்து கறிக் கோழி விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த 26 ஆம் தேதி ஒரு கிலோ கறிக்கோழி  கொள்முதல் விலை 104 ரூபாயாக இருந்தது.  இந்நிலையில் வெள்ளியன்று 74  ரூபாயாக விலை வீழ்ச்சியடைந்துள்ளது.

வாரிசு சான்றிதழ் தாமதிக்காமல் வழங்க வலியுறுத்தல்

திருப்பூர், ஆக. 10 – தாராபுரம் தாலுகா அலுவலகத்தில் வாரிசு சான்றிதழுக்கு விண்ணப்பித்தால் 15  நாட்கள் கழித்துத்தான் சான்றிதழ் தருகின்ற னர். தேவையற்ற கால தாமதத்தைத் தவிர்த்து  உடனடியாக சான்றிதழ் வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாராபுரம் தாலுகா செயலாளர் என்.கன கராஜ் கேட்டுக் கொண்டிருக்கிறார். இது குறித்து ஆட்சியருக்கு அவர் அனுப் பியுள்ள புகார் கடிதத்தில் கூறியிருப்பதா வது: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தாலுகா  அலுவலகத்தில் வாரிசு சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்தால் 15 நாட்கள் கழித்துத் தான் சான்றிதழ் வருகிறது. இது பற்றி கேள்வி  கேட்டால் 15 நாட்கள் கழித்துத்தான் தர வேண் டும் என்று பதில் சொல்கிறார்கள் சான்றி தழ்கள் உடனுக்குடன் வழங்கினால் பொது மக்கள் அலைய வேண்டியதில்லை. ஒவ் வொரு நாளும் சென்று வட்டாட்சியரிடம் கேட்டுப் பார்ப்பது என்று தொடர்ந்து நடை யாய் நடக்க வேண்டியுள்ளது.  எனவே சான்றிதழ்களை உடனடியாக அனுப்புவதற்கு ஆட்சியர் உத்தரவிட வேண் டும். உதாரணத்திற்கு டி.என். 720 240 72 32 89  9 என்ற சான்றிதழ் விண்ணப்ப மனு ஜூலை 23ஆம் தேதி பதிவு செய்யப்பட்டது. சான்றிதழ்  கிடைக்கப்பெற்ற தேதி ஆகஸ்ட் 8. அதாவது  16ஆவது நாளில் மட்டுமே சான்றிதழ் கிடைக் கிறது. எனவே மிகவும் காலதாமதமாக சான்றி தழ் வருகிறது இனிமேல் இது குறித்து உரிய  முறையில் விசாரணை செய்து சான்றிதழ் களை உடனுக்குடன் பொதுமக்களுக்கு வழங்க ஆவண செய்ய வேண்டும். காலதாம தம் செய்யும் அதிகாரி மீது துறை ரீதியாக நட வடிக்கை எடுக்க வேண்டும் என என்.கன கராஜ் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

இடுவாயில் ரேஷன் சிறப்பு முகாம் 

திருப்பூர், ஆக. 10 - இடுவாய் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் சனியன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை  ரேஷன் கார்டுதாரர்களுக்கான சிறப்பு முகாம் நடைபெற் றது.  இதில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம்  செய்தல், முகவரி மாற்றம், கைபேசி எண் இணைத்தல், அருகில் உள்ள ரேஷன் கடைகளுக்கு அட்டையை மாற்றிக்  கொள்ளுதல் ஆகிய சேவைகள் வழங்கும் பணி நடைபெற் றது. இம் முகாமில் ஊராட்சி மன்றத் தலைவர் கணேசன் கலந்து  கொண்டார். குடிமைப் பொருள் வழங்கல் துறையின் உதவி  தாசில்தார் சிவசுப்பிரமணியம், சூர்யா, ரமேஷ் ராஜ் ஆகிய  துறையின் அலுவலர்களும் , ஊராட்சி மன்ற துணைத் தலை வர் எஸ்.பரமசிவம் ஆகியோர் கலந்து கொண்டனர். 60க்கும்  மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் முகாமில் கலந்து கொண்டு இந்த சேவைகளை பயன்படுத்திக் கொண்டனர். முகாமை சிறப்பாக ஏற்பாடு செய்ததற்கு ஊராட்சி நிர்வா கத்திற்கு பாராட்டு தெரிவித்ததுடன், விரைவில் மீண்டும்  ஒருமுறை முகாம் நடத்த ஏற்பாடு செய்யும்படி கோரிக்கை  விடுத்தார்கள். அடுத்த மாதம் முகாம் நடத்த ஏற்பாடு செய்வ தாக தெரிவிக்கப்பட்டது.

அத்திக்கடவு அவிநாசி திட்டப்பணிகள் குறித்த கலந்தாய்வு

ஈரோடு, ஆக. 10- ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், அத்திக்கடவு அவிநாசி திட்டப்பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் சனியன்று அமைச்சர் சு.முத்துசாமி தலைமை யில் நடைபெற்றது. அத்திக்கடவு - அவிநாசி திட்டமானது பவானி ஆற் றில் காளிங்கராயன் அணைக்கட்டின் கீழ்புறத்திலி ருந்து ஆண்டொன்றிக்கு 1.50 டி.எம்.சி உபரி நீரை நீரேற்று முறையில் நிலத்தடியில் குழாய் பதித்து குளம் குட்டைக ளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் உள்ள 24,468  ஏக்கர் நிலம் பயன்பெறும் வகையில் வடிவமைக்கப்பட் டுள்ளது. இதில் 32 நீர்வளத்துறை ஏரிகள், 42 ஊராட்சி ஒன்றிய ஏரிகள் மற்றும் 971 குளம் குட்டைகள் என மொத் தம் 1045 ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட வுள்ளது. இத்திட்டத்தின் செயலாக்க பணிகள் அனைத் தும் முடிக்கப்பட்டு தற்போது சோதனை ஓட்டம் நடை பெற்றுள்ளது. பணிகளை விரைவாக முடித்து பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச் சர் தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தி னார். இக்கூட்டத்தில், ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் சதிஷ்குமார், நீர்வள  ஆதாரத்துறை கண்காணிப்பு பொறியாளர் திருமலை குமார் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பங்கேற்றனர். 

பாலியல் வன்கொடுமை - வாலிபர் கைது

உதகை, ஆக. 10- பணிமுடிந்து வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்த பெண்ணை, பலவந்தப்படுத்தி பாலியல் வன்கொடுமை யில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது சிறையில் அடைத்தனர். நீலகிரி மாவட்டம், ஊட்டியை சேர்ந்த பெண்ணுக்கு  ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவர் குடும் பத் தகராறு காரணமாக கணவரை பிரிந்து மகனுடன் வசித்து வருகின்றார். மகளுக்கு திருமணம் முடிந்து அதே பகுதியில் வேறு வீட்டில் கணவருடன் வசித்து வரு கிறார். இப்பெண் உதகையில் உள்ள ஒரு பானிபூரி கடை யில் பணிபுரிந்து வருகிறார். தினசரி காலை 10 மணிக்கு  வேலைக்கு வந்துவிட்டு இரவு 8 மணிக்குமேல் பணி முடிந்து வீடு திரும்புவார். இந்நிலையில், கடந்த 6 ஆம் தேதியன்று பணி  முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது மான் பூங்கா தனியார் பள்ளி பகுதியில் சென்றபோது, 25  வயது வாலிபர் ஒருவர் வழிமறித்து அந்த பெண்ணிடம் தகாத முறையில் ஈடுபட்டு உள்ளார். ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி என்பதால், அந்த பெண் தன்னை தற் காத்துக் கொள்வதற்காக, கண்ணீர் விட்டு கதறி அழு துள்ளார். ஆனாலும், அந்த வாலிபர், பெண்ணிடம் பாலி யல் வன்கொடுமையில் ஈடுபட்டார். இதன் பின்னர் அந்த  வாலிபர் அப்பகுதியில் இருந்து தப்பி சென்று விட் டார்.  இதைத் தொடர்ந்து அந்த பெண்ணை உறவினர் கள் மீட்டு உதகை அரசு மருத்துவமனைக்கு அனுமதித்தித னர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகி றது. இதுகுறித்த புகாரின் பேரில், போலீசார் சம்பவம்  நடந்த பகுதியில் நேரடியாக சென்று விசாரணை மேற் கொண்டனர்.  பின்னர் பாலியல் வன்கொடுமையில் ஈடு பட்ட நபரை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டி ருந்தனர். இதற்காக செல்போன் சிக்னல் அடிப்படை யில் இந்த பகுதியில் பதிவான செல்போன் எண் களைக் கொண்டு விசாரித்தனர். மேலும், கண்காணிப்பு  கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில், வன்கொடு மையில் ஈடுபட்டது உதகை கீழ் தலையாட்டுமந்து பகு தியை சேர்ந்த சதீஷ்குமார் (25) என்பது தெரியவந்தது. தனியார் மசாலா நிறுவனத்தில் டெலிவரி பிரிவில் பணி யாற்றி வந்துள்ளார். இதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி சிறையில் அடைத்தனர்.  விசாரணையில், சதீஷ்குமார், மது போதையில் இருந்ததால் இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய  வந்தது.

விமானம் பயணியிகளிடம் தங்க கட்டிகள் பறிமுதல்

கோவை, ஆக. 10- சிங்கப்பூரில் இருந்து கோவை வந்த  2 விமானம் பயணியிகளிடம், தங்க கட்டி கள் மற்றும் வெளிநாட்டு சிகரெட்டு களை சனியன்று சுங்கத்துறை அதிகாரி கள் பறிமுதல் செய்து, விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். கோவை மாவட்டம், விமான நிலை யத்தில் இருந்து சார்ஜா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் சென்னை, மும்பை, பெங்களூர், டெல்லி  உள்ளிட்ட நகரங்களுக்கும் விமானங் கள் இயக்கப்பட்டு வருகிறது. குறிப் பாக, வெளிநாடுகளில் இருந்து கோவை  வரும் விமானங்களில் தங்கக் கட்டி கள் உள்ளிட்ட பொருள்கள் கடத்தப்படு வதை தடுக்க சுங்கத்துறை அதிகாரி கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வரு கின்றனர். இந்நிலையில், சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு வரும் ஸ்கூட் விமா னத்தில் தங்கக் கட்டிகள் கடத்தி வரப்படு வதாக சுங்கத் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில்  சிங்கப்பூரில் இருந்து கோவை விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் இருந்து இறங்கிய பயணிகளை அதி காரிகள் கண்காணித்தனர். அப்போது இரண்டு பயணிகள் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே அவர்கள் இரண்டு பேரையும் ரகசிய அறைக்கு அழைத்துச் சென்று  சோதனை செய்தனர். அதில் ஒருவர்  தலா 100 கிராம் எடை கொண்ட ஆறு தங்க  கட்டிகளை பொருட்களுக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்ததை  கண்டுபிடித்தனர். உடனே அதிகாரிகள் அந்த தங்க கட்டிகளை பறிமுதல் செய் தனர். அதன் மதிப்பு ரூபாய் 41. 3/4 லட் சம் ஆகும். அதேபோன்று மற்றொரு பய னியின் உடமைகளை சோதனை செய்த னர். அவர் வைத்து இருந்த பையை திறந்து பார்த்த போது அதில் ஏராள மான வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டு கள் இருந்தன. அவற்றை கொண்டு வர  உரிய அனுமதி பெறவில்லை. இதை தொடர்ந்து அதிகாரிகள் அந்த பயணியி டம் இருந்து 90 ஆயிரம் சிகரெட் பறிமு தல் செய்தனர். அதன் மதிப்பு ரூபாய் 15 லட்சத்து 30 ஆயிரம் ஆகும். அந்த  இரண்டு பேரிடமும் தொடர்ந்து அதிகாரி கள் விசாரணை மேற்கொண்டு வரு கின்றன.

உதகையில் கடும் குளிர், பனிமூட்டம் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

உதகை, ஆக. 10- நீலகிரி மாவட்டத்தில் நிலவும் கடும்  குளிர், பனிமூட்டம் காரணமாக பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.  நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், கடந்த 2 வாரங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. கடும் சூறாவளி காற்றுடன் மழை பெய்து வந்ததால் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் விழுந்து போக் குவரத்து பாதிக்கப்பட்டது. அதேபோல்  மின் கம்பங்கள் விழுந்து மின்வினியோ கம் பாதிப்புக்கு உள்ளானது. விவசாய  பயிர்களும் பாதிக்கப்பட்டன அணை களுக்கு தொடர்ச்சியாக நீர்வரத்து அ திகரித்து காணப்படுகிறது. தற்போது  மழை தீவிரம் குறைந்துள்ளதால்  மெல்ல நீலகிரி இயல்பு நிலைக்கு திரும் பியது. இந்நிலையில், தென் மேற்கு பரு வமழை மற்றும் மேற்கு திசையில்  இருந்து வீசும் காற்றின் வேக மாறுபாடு  காரணமாக தமிழகத்தில் மழை நீடிக்கும்  எனவும் நீலகிரி உள்பட பல மாவட்டங்க ளில் மழை இருக்கும்  எனவும் சென்னை  வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.  இதன்படி நீலகிரியில் வெள்ளியன்று  முதல் கடும் குளிர் பனிமூட்டம் நிலவு கிறது. இதனால், சனியன்று காலை உதகை, குன்னூர், மஞ்சூர் உள்ளிட்ட  பகுதிகளில் சாலைகளில் சென்ற வாகன  ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர். எதிரில்  வந்த வாகனங்கள் சரிவர தெரிய வில்லை. இதனால், வாகன ஒட்டிகள்  முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி  வாகனங்களை இயக்கி வருகின்றனர். மேலும், கடும் குளிர் காரணமாக வயதா னவர்கள், பெண்கள் அவதிப்பட்டனர்.  இதற்கிடையே இந்த குளிரை மிக வும் ரசித்த சுற்றுலாப் பயணிகள் சுற்று லாத் தளங்களில் குடும்பமாக சுற்றி வந்த னர். கம்பளி ஆடைகளை அணிந்து பல் வேறு சுற்றுலாத் தளங்களுக்கு சென்று  புகைப்படம் எடுத்து மகிழ்ச்சியடைந்த னர். இதேபோல் மதியத்திற்கு பின்னர்  தொடர்ச்சியாக லேசான வெயில் வந்த தால் இயல்பு நிலைக்கு சற்று திரும்பி யது. உதகையில் குறைந்தபட்சமாக சனியன்று 14 டிகிரி செல்சியசும், அதிக பட்சமாக 18 டிகிரி செல்சியசும் வெப்ப நிலை பதிவானது. ஆனால், காற்று ஈரப் பதத்தின் அளவு 78 சதவீதமாக பதிவாகி  இருந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள் ளது.

தலைகவசம் குறித்த விழிப்புணர்வு

உதகை, ஆக. 10 தலைகவசம் அணிவதன் அவசியம் குறித்து உதகையில் இரு சக்கர வாகன விழிப் புணர்வு பேரணி சனியன்று நடைபெற்றது. நீலகிரி மாவட்டம், மலைப்பிரதேசம் என்ப தால் இங்குள்ள மலைப்பாதைகளில் அதிக  அளவில் இருசக்கர வாகன விபத்து ஏற்படு கிறது. இது போன்ற விபத்தில் சிக்குபவர்கள்  பெரும்பாலும் தலைக்கவசம் அணியாததால்  தலையில் காயம் ஏற்பட்டு உயிரிழக்கின்ற னர். எனவே, இருசக்கர வாகன விபத்தில் உயி ரிழப்புகளை தடுக்கும் வகையில் உதகை நகர போக்குவரத்து காவல் துறையினர் மற்றும்  கோவையை சேர்ந்த இரு சக்கர வாகன ஓட்டி கள் சங்கத்தினர் சார்பில் தலைக்கவச விழிப்பு ணர்வு பேரணி சனியன்று உதகையில் நடை பெற்றது.  இந்தப் பேரணியை உதகை காவல் துணை கண்காணிப்பாளர் யசோதா கொடிய சைத்து  தொடங்கி வைத்தார். இப்பேரணி உத கையில் இருந்து துவங்கி நடுவட்டம் வழி யாக கூடலூர் சென்றடைந்து. அங்கிருந்து மசி னகுடி வழியாக மீண்டும் உதகைக்கு வந்த டைந்தது. இந்தப் பேரணியில் உதகை, குன் னூர், கோத்தகிரி மற்றும் கோவையை சேர்ந்த  70-க்கும்  மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.  முன்னதாக இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இலவச தலைகவசங்கள் வழங்கப்பட்டது.  இதில், போக்குவரத்து காவல் உதவி ஆய் வாளர் அருண் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கடத்தப்பட்ட பச்சிளம் குழந்தை மீட்பு; பெண் கைது

சேலம், ஆக.10- சேலம் அரசு மருத்துவமனையிலிருந்து கடத்தப்பட்ட பிறந்து ஐந்து நாள்களே ஆன ஆண் குழந்தையை பத்திரமாக மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தைச் சோ்ந்த தங்கதுரையின் மனைவி வெண்ணிலா பிரவசவத்துக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கடந்த ஆக.5 ஆம் தேதி யன்று ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், வெண்ணிலா அனுமதிக்கப்பட்டிருந்த வார்டுக்கு வெள்ளியன்று வந்த பெண் ஒருவர், குழந்தைக்கு மஞ்சள் காமாலை உள்ளதால் மருத்துவர்களிடம் காண்பித்துவிட்டு வருகிறேன், எனத் தெரிவித்து குழந்தையை எடுத்துச் சென்றுள்ளார். வெகு நேரமாகியும் திரும்பி வராததால், அதிர்ச்சியடைந்த வெண்ணிலாவும், அவரது உறவினர்களும் அந்த பெண்ணை மருத்துவமனை முழுவதும் தேடினர். எங்கு தேடியும் அவர் கிடைக்காததால் சேலம் அரசு மருத்து வமனை காவல் நிலையத்தில் புகாரளித்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், குழந்தையைக் கடத்திச் சென்ற இளம்பெண்ணைத் தேடி வந்தனர். இந்நிலையில், வாழப்பாடியில் கண்காணிப்பு கேம ராவில் பதிவான காட்சிகளை துருப்புச்சீட்டாக பயன்ப டுத்தி தீவிர விசாரணையில் ஈடுபட்ட சேலம் மாநகர காவல் துறையினர், காரிப்பட்டியைச் சேர்ந்த பெண் வினோதி னியை கைது செய்து, அவரிடமிருருந்த ஆண் குழந்தையை பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மேலும், குழந்தையை கடத்திய வினோதினியை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குழந்தை கடத்தப்பட்ட 15 மணி நேரத்திற்குள் பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த சேலம் மாநகர காவல் துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

கோவை – பரவுனிக்கு சிறப்பு ரயில்

சேலம், ஆக.10- சேலம் வழியாக கோவை - பரவுனி இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சார் பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், கூட்ட நெரிச லைத் தவிர்க்கும் வகையில் ரயில்வே நிர்வாகம் சிறப்பு ரயில் களை இயக்கி வருகிறது. அந்த வகையில், தற்போது சேலம் வழியாக கோவையில் இருந்து பிகார் மாநிலம், பரவுனிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும். அதன்படி, ஆக.13 ஆம் தேதி முதல் செப்.3 ஆம் தேதி வரை செவ்வாய்க்கிழமைகளில் கோவையில் இருந்து காலை 11.50 மணிக்கு புறப்பட்டு திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக வியாழனன்று பிற் பகல் 2.30 மணிக்கு பரவுனியை சென்றடையும். இதேபோல மறுமார்க்கத்தில் பரவுனி - கோவை வாராந்திர சிறப்பு ரயில் வருகிற ஆக.16 ஆம் தேதி முதல் செப்.6 ஆம் தேதி வரை வெள்ளிக்கிழமைகளில் பரவுனியில் இருந்து இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு, திங்களன்று அதிகாலை 3.45  மணிக்கு கோவை சென்றடையும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.