districts

img

கழுத்தில் குத்திய கம்பியோடு வந்த இளம்பெண்

கோவை, செப்.19- இளம்பெண் ஒருவர் கழுத்தில் கம்பி  குத்திய நிலையில் மருத்துவமனைக்கு வந்த நிலையில் அதனை அரசு மருத் துவர்கள் வெற்றிகரமாக கையாண்டு அறுவை சிகிச்சை செய்து அகற்றினர். இதுகுறித்து கோவை அரசு மருத் துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் நிர்மலா கூறுகையில், கடந்த 22.08.2022 அன்று 28-வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர் கழுத்தின் முன் பகுதி யில் இரும்பிலான கம்பி ஒன்று குத்திய நிலையில் கை, கால்களின் இயக்கம் பாதிக்கப்பட்டு அவசர சிகிச்சைப் பிரி வில் அனுமதிக்கப்பட்டார். வலிப்பு வந்த போது கையில் கொடுக்கப்பட்ட கம்பி கழுத்தில் குத்தியதாக அவரு டன் வந்த உறவினர்கள் தெரிவித்த னர். ஸ்கேன் மற்றும் இதர பரிசோதனை களின் முடியில் கழுத்தின் வலது பக்கம் பாய்ந்த கம்பியானது மூச்சுக்குழாய், உணவுக்குழாய் மற்றும் ரத்தநாளங் களின் மிக அருகில் பாய்ந்து தண்டு வட எலும்பினை துளைத்து தண்டுவடத் தில் குத்தியிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து நரம்பியல் அறுவை சிகிச்சை, இதய அறுவை சிகிச்சை மற் றும் மயக்க மருந்து நிபுணர்கள் அறுவை சிகிச்சை செய்து கழுத்தில் பாய்ந்த கம் பியை நோயாளிக்கு எந்தவித பாதிப்பு மின்றி அகற்றினர். அறுவை சிகிச்சைக் குப் பின்னர் இளம்பெண் கை, கால்கள் இயக்கம் சீறடைந்து வீடு திரும்பினார், என்றார்.  இந்த சிக்கலான அறுவை சிகிச் சையை வெற்றிகரமாக செய்த மருத்து வக் குழுவினரை மருத்துவமனை முதல் வர் உள்ளிட்ட சக மருத்துவர்கள் பாராட்டினர்.

;