districts

img

லாரி மோதிய விபத்து - அரசு பேருந்து கவிழ்ந்து 8 பேர் காயம்

மேட்டுப்பாளையம், டிச.27- மேட்டுப்பாளையம் அருகே அரசு பேருந்து மீது சரக்கு  லாரி மோதியதில், சாலையோரம் பேருந்து கவிழ்ந்து 8 பேர்  காயமடைந்தனர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து  சத்தியமங்கலம் நோக்கி அரசு பேருந்து ஒன்று செவ்வா யன்று 20 பயணிகளுடன் சிறுமுகை சாலையில் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில், ஆலாங்கொம்பு என்னு மிடத்தை கடந்து சென்றபோது, அருகில் இருந்த கிளை  சாலையில் இருந்து முக்கிய சாலைக்கு திரும்பிய தூத்துக் குடியில் இருந்து கரி கட்டைகளை ஏற்றி வந்த சரக்கு லாரி யொன்று எதிரே வந்த பேருந்து மீது வேகமாக மோதியது.  இதில், அரசு பேருந்து நிலை தடுமாறி சாலையோரம் கவிழ்ந் தது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடைபெற்ற இந்த பயங்கர  விபத்தில் பேருந்தின் ஓட்டுனர், நடத்துனர் உட்பட 8 பேர் காயங் களுடன் உயிர் தப்பினர்.  இதையடுத்து காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்க பட்டு ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட னர். இவ்விபத்து காரணமாக மேட்டுப்பாளையம் சிறு முகை சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மீட்பு வாகனம் கொண்டு வரப்பட்டு சாலை யில் நின்றிருந்த சரக்கு லாரி மற்றும் கவிழ்ந்து கிடந்த பேருந்தை அகற்றும் பணி நடைபெற்றது. இவ்விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.