உடுமலை, ஜன.9- தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் குப்பைகளை கொட்டு வதை தடுக்க நெடுஞ்சாலை துறை உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொள்ளாச்சி – திண்டுக்கல் 209 தேசிய நெடுஞ்சாலை கோவையில் இருந்து பொள்ளாச்சி வரையிலும், அதே போல் பொள்ளாச்சி முதல் திப்பம்பட்டி வரையிலும் நான்கு வழி சாலையாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகி றது. இவ்வாறு, தேசிய நெடுஞ்சாலையை விரிவாக்க வேலைகள் நடைபெறும் அதே வேலையில் உடுமலை அருகே உள்ள பெரியகோட்டை பகுதியில் இருந்து மைவாடி பிரிவு வரையில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் சமத்துவபுரம், பாலப்பம்பட்டி கிராமங்களில் இயங் கிவரும் பஞ்சாலை, பனியன் மற்றும் சிறிய அளவிளான ஒர் க்ஷாப் நிறுவனங்களிலிருந்து கழிவுகளை எடுத்து வந்தது கொட்டி செல்கின்றனர். பின்னர் அந்த கழிவுகளுக்கு தீ வைப் பதால் அப்பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடு ஏற்படுகி றது. எனவே, தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் மற் றும் பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் தேசிய நெடுஞ்சா லையின் ஓரங்களில் குப்பைகளை கொட்டுவதை நெடுஞ் சாலை துறை தடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.