districts

img

முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள்

கோவை, செப்.24- கோவையில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் ஒன்றாக நடைபெற்ற சதுரங்கப் போட்டியில், சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பின் நிர்வாகி மூன்றாம் பரிசை தட்டிச்சென்றார். பள்ளி, கல்லூரி, பொதுப்பிரிவு, அரசு ஊழியர்கள் ஆகியோருக்கான சிலம்பம், கேரம், சதுரங்கம் உள்ளிட்ட போட்டிகளை கொண்ட மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் கோவை மாவட்டம், இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் திங்களன்று நடைபெற்றது. இதில், சதுரங்கப் போட்டியில் விளையாடிய காவல்துறையில் பணியாற்றும் கோவை புதூர் பகுதியைச் சேர்ந்த மதுசூதனன் முதலாவது பரிசையும், மாநகராட்சியில் பணி புரியும் எம்.ஜெ.சுகந்த பிரியன் இரண்டாம் பரிசினையும், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரியும் ஊழியர்  பாப்பநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த எ.சாதிக்பாட்சா மூன்றாம் பரிசினையும், மாநகராட்சி உயர்நிலை பள்ளியில் பணி புரியும் செல்வாபுரம் வி.சதீஷ் நான்காம் பரிசினையும் பெற்றனர். இதில், மூன்றாம் பரிசை வென்ற சாதிக்பாட்சா, சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பின் கோவை மண்டல நிர்வாகி என்பது குறிப்பிடத்தக்கது.